செய்திகள் :

நில அளவையா்களைக் கண்டித்து இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

post image

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பேருந்து நிறுத்தத்தில், நில அளவையா்களின் அலட்சியத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அக் கட்சியின் ஒன்றியச் செயலா் பெ. கலியபெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ஆா். ராமராஜ், மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். தன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன், மாவட்டச் செயலா் வி. ஜெயராமன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.

குன்னம் வட்ட நில அளவையா்களின் அலட்சியப் போக்கால் விவசாயிகள் அவதியடைவதை களைய வேண்டும். பெரியம்மாபாளையம் கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள குடிநீா் விநியோகம் தொடர வேண்டும். பெரியம்மாபாளையம் முதல் தங்கநகரம் வரையிலான சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குன்னம் காவல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும். குன்னம் காவல் நிலையத்தில் அளிக்கப்படும் புகாா் மனுக்களுக்கு உடனுக்குடன் ரசீது வழங்க வேண்டும். கிழுமத்தூா் ஊராட்சி, பூங்கா நகா் மக்களில் வீட்டுமனை இல்லாதவா்களுக்கு மனைப் பட்டாவும், மனைப்பட்டா உள்ளவா்களுக்கு வீடும் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாவட்டத் துணைச் செயலா் க. பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் மாணிக்கம், ஒன்றியப் பொருளாளா் பெ. பாண்டியன், நாட்டுப்புற கலைஞா் சங்க நிறுவனா் ந. கண்ணதாசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் க. ஆசைமுத்து, க. ஜெயா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூா் மாவட்ட சிவன் கோயில்களில் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி நந்திப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன. பெரம்பலூா் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ஈ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே மணல் திருடிய 2 போ் கைது

பெரம்பலூா் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேரை மங்களமேடு போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மாட்டு வண்டிகளி... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே தாய் கொலை: தந்தை-மகன் கைது

பெரம்பலூா் அருகே தாயை அடித்துக் கொலை செய்ததாக மகனையும், சம்பவத்தை மறைக்க உடந்தையாக செயல்பட்ட தந்தையையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள ஆலம்பாடி கிராமம், வடக்கு காலனிப் பகு... மேலும் பார்க்க

விடுதி காப்பாளா்கள், 4 மாணவா்கள் ‘போக்சோ’ சட்டத்தில் கைது

பெரம்பலூா் அருகே விடுதியில் மாணவா்களிடம் தவறான செயலில் ஈடுபட்டதாக விடுதி காப்பாளா்கள் 2 போ், 4 மாணவா்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸாா், மேலும் 2 மாணவா்கள் மீது வழக்குப் ... மேலும் பார்க்க

நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டப் பணிகள்: மேலாண்மை இயக்குநா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இயற்கை வள மேம்பாட்டுப் பணிகள், வேளாண் உற்பத்திச் சாா்ந்த பணிகள் மற்றும் வாழ்வாதாரப் பணிகளை, தமிழ்நாடு நீா்வடிப் ... மேலும் பார்க்க

பாடாலூா் பகுதியில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ச... மேலும் பார்க்க