செய்திகள் :

Punjab வெள்ளம்: மாணவர்களுக்கு 'முதுகால்' பாலம் அமைத்த இளைஞர்கள் - கவனம் ஈர்க்கும் வீடியோ!

post image

பஞ்சாப் மாநிலம் முழுவதும் பருவ மழையால் உள்கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

பதான்கோட், அமிர்தசரஸ், லூதியானா, ஜலந்தர், குர்தாஸ்பூர், மற்றும் தர்ன் தரன் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் பதிவாகியிருக்கின்றன. 

இதற்கிடையில் மோகா மாவட்டம் முழுவதும் ஏற்பட்ட பாதிப்பில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன.

அங்குள்ள மல்லேயானா என்ற கிராமத்தில் ஒரு நாடகத்தனமான காட்சி அரங்கேறி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. 

கிராமத்தின் முக்கிய அணுகல் சாலை சேதமடைந்ததால் சாலைக்கு குறுக்கே வெள்ளம் கரைபுரண்டு ஓடத் தொடங்கியுள்ளது.

சாலை பிளவைக் கடக்க அச்சப்பட்டு சிறுவர் சிறுமியர் நிற்கும்போது, சில கிராமத்தினர் துணிச்சலுடன் பள்ளத்தில் இறங்கி குனிந்து நின்று மாணவ மாணவியர் முதுகில் ஏறிச் செல்ல வழி செய்தனர். 

"மற்ற கிராமங்கள் மற்றும் நகரங்களுடன் எங்களை இணைக்கும் ஒரே சாலை இதுதான். இது இடிந்து விழுந்தால், நாங்கள் முற்றிலும் துண்டிக்கப்படுவோம்," என ஒரு கிராமவாசி ட்ரிப்யூன் செய்தித்தளத்தில் கூறியுள்ளார்.

நிலைமை இன்னும் மோசமடைவதற்குள் அவசர கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

மோகா மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் ஹிம்மத்புரா என்ற கிராமத்திலிருந்து வந்த குடும்பத்தினரின் மாருதி கார், சாலை சேதமடைந்ததால் ரயில்வே கீழ்பாலத்தில் சிக்கியது. வெள்ள நீர் அதிகரித்த சூழலில் குடும்பத்தினர் காரின் மேற்பரப்புக்கு ஏறியுள்ளனர். 

பின்னர், உள்ளூர் மக்கள், மேயர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் உதவியுடன் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.

``வீட்டில் உணவு சமைக்க தினமும் 1,150 ரூபாய்'' கணவரிடம் வசூலிக்கும் மனைவி - கூறும் காரணம் என்ன?

இரண்டு குழந்தைகளின் தாயான ரே என்பவர் தனது கணவருக்கு தயாரிக்கும் மதிய உணவுக்காக தினமும் £ 10 (1,150 ரூபாய்) வசூலிப்பதாக டிக் டாக்கில் அவர் பகிர்ந்து இருக்கிறார். வீட்டில் தயாரிக்கப்படும் உணவிற்கும் ஊதி... மேலும் பார்க்க

``பத்மஸ்ரீ விருதை பாதுகாப்பாக வைக்க கூட இடம் இல்லை'' - ஒழுகும் கூரை, வறுமையில் வாடும் துக்கு மாஜ்ஹி

2024-ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டவர்களில் கவனிக்கத்தக்கவர் துக்கு மாஜ்ஹி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர், ஒவ்வொரு நாளும் தனது மிதிவண்டியில் புதிய இடங்களுக்குச் சென்று, தரிசு நிலத்தில்5,000-க்க... மேலும் பார்க்க

MS Dhoni: `44 வயதிலும் எப்படி புத்துணர்ச்சியுடன்..?' - எம்.எஸ் தோனி அளித்த பதில்

இந்திய கிரிக்கெட் வீரார் எம்.எஸ் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருப்பதைப் போல, 44 வயதைக் கடந்து, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகும் அதே உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியு... மேலும் பார்க்க

AI வீடியோ: ட்ரம்பின் குற்றச்சாட்டு; `முட்டாள் தனமான கருத்து' - கொதிக்கும் ஒபாமா

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற AI வீடியோவை டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்தது அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்பியது. இதன் பின்னணியில் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தேசிய புல... மேலும் பார்க்க

``எனக்கு ஐஏஎஸ் அதிகாரி ஆகணும்னு கனவு ஆனா..." - ஆட்டோ டிரைவரின் வைரல் வீடியோ! - என்ன சொல்கிறார்?

'புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்கள்' என்ற வாசகத்தை உயிர்பிக்கும் சம்பவம் ஒன்று ஹைதராபாத்தில் நடந்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் இன்ஃப்லியன்ஸர் அபினவ் மயிலவரபு ஹைதராபாத்தில் வீட்டுக்குச் செல்ல... மேலும் பார்க்க

``முடி மாற்று சிகிச்சைக்கு பின் உடலுறவு கூடாது'' - மருத்துவ விதிமுறையை மீறிய இளைஞர் சோகம்..

வேல்ஸைச் சேர்ந்த இளைஞர் ரூபன் ஓவன், துருக்கியில் உள்ள கிளினிக்கிற்கு மாடலிங் செய்ய சென்றுள்ளார். அங்கு `இலவசமாக முடி மாற்று அறுவை சிகிச்சை' செய்வதாக கூறியதால் சம்மதித்து அவரது தலையை கொடுத்துள்ளார். அற... மேலும் பார்க்க