செய்திகள் :

குழந்தைகளைக் கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு வாழ்நாள் சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி!

post image

கடந்த 2018-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்த அபிராமி பெற்ற இரண்டு குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து (மாத்திரைகள்) கொடுத்து கொடூரமாக கொலை செய்தார். இந்தக் குற்றச்சாட்டில் அபிராமியை குன்றத்தூர் போலீஸார் கைது செய்து விசாரித்ததில் இந்தக் கொலையில் அபிராமியின் ஆண் நண்பரான பிரியாணி மாஸ்டர் மீனாட்சி சுந்தரத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதோடு இவர்கள் இருவரும் டிக்டாக் மூலம் பழகி திருமணத்தை மீறிய உறவில் இருந்ததும் தெரியவந்தது. இவர்களின் இந்த பழக்கத்துக்கு தடையாக குழந்தைகள் இருந்ததால் அவர்களை கொலை செய்த அதிர்ச்சி தகவலும் வெளியானது. இந்த வழக்கு கடந்த 2018-ம் ஆண்டில் பரபரப்பாக பேசப்பட்டது. குழந்தைகளைக் கொலை செய்த அபிராமியை குன்றத்தூர் போலீஸார் புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர். அதைப் போல மீனாட்சி சுந்தரத்தை புழல் ஆண்கள் சிறையில் அடைத்திருந்தனர்.

குன்றத்தூர் அபிராமி

இவர்கள் இருவர் மீதும் சதி திட்டம் தீட்டுதல், கொலை உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதோடு இந்த வழக்கை குன்றத்தூர் போலீஸார் சிறப்பாக புலனாய்வு செய்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தனர். அதோடு இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போதெல்லாம் இன்ஸ்பெக்டர் வேலு, நீதிமன்ற பணிகளை மேற்கொள்ளும் காவலர் ராஜ்கிரன் ஆகியோர் சாட்சிகளையும் நீதிமன்றத்தில் சரியான நேரத்தில் ஆஜர்படுத்தியதோடு தேவையாக சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். மேலும் சிறையில் அடைக்கப்பட்ட அபிராமியும் மீனாட்சி சுந்தரமும் ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்திலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர். அப்போது ஜாமீன் மனுவுக்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் இருவருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜராகி வந்தார். வழக்கில் இன்று நீதிபதி செம்மல், குற்றவாளிகளான அபிராமிக்கும் மீனாட்சி சுந்தரத்துக்கும் ஆயுள் வரை சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். அதோடு தலா 15,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டார். தீர்ப்பை கேட்ட அபிராமி சிறை வளாகத்திலேயே கண்ணீர்விட்டு கதறி அழுதார்.

இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் சசிரேகாவிடம் பேசினோம். ``இரண்டு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் அபிராமி, மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 25 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் அபிராமிக்கு எதிராகவும் மீனாட்சி சுந்தரத்துக்கு எதிராக சாட்சியளித்தனர். பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டே குன்றத்தூர் போலீஸார் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டனர். இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கை இழுத்தடித்து வந்தனர். அபிராமியும் மீனாட்சி சுந்தரமும் ஜாமீன் கேட்டபோதெல்லாம் சட்டரீதியாக பதிலடி கொடுத்து அவர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ய வைத்தோம். அதனால் இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக சிறையிலிருந்தனர்.

மீனாட்சி சுந்தரம்

இந்த வழக்கில் இரண்டு குழந்தைகளும் எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்பதை தெளிவாக நீதிமன்றத்துக்கு ஆதாரங்களுடன் தெரிவித்தோம். அதோடு அறிவியல் பூர்வமான ஆதாரங்களையும் சமர்பித்தோம். அபிராமிக்கும் மீனாட்சி சுந்தரத்துக்கும் டிக்டாக் மூலம்தான் நட்பு ஏற்பட்டதையும் நீதிமன்றத்தில் சுட்டக்காட்டியிருந்தோம். ஆதாரங்கள், சாட்சிகள் அடிப்படையில்தான் அபிராமிக்கும் மீனாட்சி சுந்தரத்துக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை என்ற தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வழக்கில் அவர்கள் மேல்முறையீடு செய்தாலும் அங்கும் அரசு தரப்பு வாதங்களை எடுத்துரைப்போம்" என்றார்.

சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது ``பெற்ற குழந்தைகளை கொலை செய்த வழக்கில் கைதான அபிராமி, ஆரம்பத்தில் சிறையில் யாருடனும் பேசாமல் இருந்தார். அவருக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் அபிராமிக்கு கவுன்சலிங் அளித்தோம். அதன் பிறகு அபிராமி ஒரளவு நார்மலாகினார். இருப்பினும் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு சிறை திரும்பும்போது மனவேதனையுடன் காணப்படுவார். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. அவருக்கு சிறை வாழ்க்கை பழகிவிட்டது. என்ன தீர்ப்பு கிடைக்கும் என சக கைதிகளிடம் கேட்ட அவர், இரவு முழுவதும் சரியாக தூங்காமல் இருந்தார். தன்னுடைய முகம் வெளியில் தெரியக் கூடாது என்பதற்காகத்தான் துப்பட்டவால் மூடிக் கொண்டு சிறைக்கு வந்தார். அதைப்போல கறுப்பு நிற சுடிதாரையும் அவர் அணிந்து நீதிமன்றத்துக்கு வந்தார்'' என்றனர்.

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவ... மேலும் பார்க்க

சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் லாக்கப் டெத்: அப்ரூவராக மாற விரும்பும் ஸ்ரீதர்; எதிர்க்கும் சிபிஐ.. பின்னணி என்ன?

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்த பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுச்செய்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிபிஐ தரப்பில் எதிர்ப்பு ... மேலும் பார்க்க

கண்ணாடி துகள்; சீனா டிவைஸ்; 100 வழக்குகள் - சொகுசு கார் திருடனின் பகீர் பின்னணி!

சென்னை, அண்ணாநகர் மேற்கு, 16வது மெயின்ரோடு, கதிரவன் காலனியில் குடியிருந்து வருபவர் எத்திராஜ் ரத்தினம். இவர் கடந்த 10.06.2025-ம் தேதி தன்னுடைய Toyoto Fortuner காரை வீட்டின் எதிரில் நிறுத்தி வைத்திருந்த... மேலும் பார்க்க

திருச்சி: கோயில் திருவிழாவில் வாண வெடி வெடித்து குழந்தை பலி; தாய் படுகாயம்; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் திருப்பைஞ்ஞீலி ஊராட்சியில் உள்ள மூவராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன். இவர், கொத்தனாராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மனோகரி.இவர்களுக்குத்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: சகோதரர்கள் வெட்டி கொலை; கொலையாளிகளைத் தேடும் போலீஸ்; அறந்தாங்கியில் அதிர்ச்சி சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த காத்தமுத்து மகன்கள் கண்ணன் (வயது: 32) மற்றும் கார்த்தி (வயது: 28). இதில், கண்ணனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கார்த்தி... மேலும் பார்க்க