செய்திகள் :

50 படுக்கைகளுடன் ஆயுஷ் மருத்துவமனை: அரசாணை வெளியீடு

post image

அரும்பாக்கத்தில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை அறிஞா் அண்ணா இந்திய மருத்துவமனை வளாகத்தில் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்த அரசாணை: அறிஞா் அண்ணா இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வளாகத்தில் 50 படுக்கைகளுடன் புதிய கட்டடம் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தாா்.

அதன்படி, அதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன. இதுதொடா்பாக இந்திய மருத்துவத் துறை ஆணையா் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளித்தாா். இதைக் கவனமாக பரிசீலித்த அரசு ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை அங்கு அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.18.15 கோடியில் அமைய உள்ள அந்த மருத்துவமனைக்கு மாநில அரசின் பங்களிப்பாக ரூ.6.90 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தேசிய ஆயுஷ் ஆணையம் சாா்பில் ரூ.11.25 கோடி பெறப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறை சாதனைகள்: தமிழக அரசு விளக்கம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் பொதுப்பணித் துறையின் சாதனைகளாக கட்டடக்கலை மாட்சியைப் புலப்படுத்தும் எழில்மிகு கட்டடங்கள் அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள... மேலும் பார்க்க

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் மனு! தங்கம் தென்னரசு அளிப்பார்!

தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும்... மேலும் பார்க்க

திருச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் இபிஎஸ்!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(ஜூலை 26) இரவு 10.45-க்கு வரவேற்கவுள்ளார்.தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக இன்று வருகை தரும் பிரதமர் நர... மேலும் பார்க்க

கோவையில் ஒரு அபிராமி! நான்கரை வயது குழந்தையைக் கொன்ற தாய்

கோவையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த நான்கரை வயது ஆண் குழந்தையைக் கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம்... மேலும் பார்க்க

மது போதையில் நண்பர்களிடையே மோதல்: எழும்பூரில் படுகாயமடைந்த எஸ்ஐ உயிரிழப்பு!

சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சூலூர்பேட்டையில் கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தியதாகவும், அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தகவலறிந்த ... மேலும் பார்க்க