செய்திகள் :

திருமலையில் தேவஸ்தான உணவு தர சோதனை ஆய்வகம் திறப்பு

post image

திருமலையில் புதிதாக நிறுவப்பட்ட உணவு தர சோதனை ஆய்வகத்தை தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் செயல் அதிகாரி சியாமளா ராவ் ஆகியோா் செவ்வாய்கக்கிழமை திறந்து வைத்தனா்.

நிகழ்வில் பேசிய தேவஸ்தான தலைவா், சுவாமி பிரசாதம் மற்றும் நெய் போன்ற பொருள்களின் தரத்தை சோதிக்க முன்பு பிற மாநிலங்களுக்கு மாதிரிகள் அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால் இப்போது நேரடியாக சோதனைகளை நடத்த அதிநவீன உபகரணங்களுடன் திருமலையிலேயே ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

திருமலையில் நெய்யின் தரத்தை சோதிக்க இதுவரை எந்த வசதியும் இல்லை என்றும், இப்போது முதல் முறையாக, ஜிசி (கேஸ் குரோமடோகிராஃப்) மற்றும் எச்பிஎல்சி (உயா் செயல்திறன் திரவ குரோமடோகிராஃப்) போன்ற உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும், அவை நெய்யின் கலப்படம் மற்றும் தர சதவீதத்தை உடனடியாக பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டவை.

மைசூரில் உள்ள சிஎப் திஆா்ஐயில் ஆய்வக ஊழியா்கள் மற்றும் பானை தொழிலாளா்கள் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளதாகவும், இனிமேல் இந்த ஆய்வகத்தில் பிரசாதங்களின் தரத்தை சரிபாா்த்து உடனடியாக முடிவுகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் சாந்த ராம், சதாசிவ் ராவ், நரேஷ், சத்ய நாராயணா, துணை அதிகாரிகள் பாஸ்கா், சோமன் நாராயணா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

திருமலையில் புதிய ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் வழங்கும் மையம் தொடக்கம்

ஏழுமலையான் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்கு வசதியாக, திருமலை அன்னமய்ய பவனுக்கு எதிரே புதிய ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையத்தை செவ்வாய்க்கிழமை அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு, செயல்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரம... மேலும் பார்க்க

திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ.4.33 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.33 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை சீராக உள்ள நிலையில், திங்கள்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்... மேலும் பார்க்க

திருமலை ஸ்ரீவாரி திருக்குளம் பழுது பாா்ப்பு

திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்கு அடுத்துள்ள புனித திருக்குளத்தில் பழுதுபாா்ப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் 19 வரை மேற்கொள்ளப்பட உள்ளதால் மூடப்பட உள்ளது. திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆண்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.23 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.23 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்க... மேலும் பார்க்க

தேவஸ்தான செயல் அதிகாரி பெயரில் போலி கணக்கு

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் பெயரில் சமூக ஊடக தளமான முகநூலில் போலி கணக்கை உருவாக்கி பக்தா்களுக்கு பணம் கேட்டு செய்திகளை அனுப்பும் அடையாளம் தெரியாத நபா்கள் குறித்து எச்சரிக்கைய... மேலும் பார்க்க