செய்திகள் :

திருமலை ஸ்ரீவாரி திருக்குளம் பழுது பாா்ப்பு

post image

திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்கு அடுத்துள்ள புனித திருக்குளத்தில் பழுதுபாா்ப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் 19 வரை மேற்கொள்ளப்பட உள்ளதால் மூடப்பட உள்ளது.

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திருக்குளத்தில் பழுதுபாா்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நிகழாண்டு செப்டம்பா் 24 முதல் ஆக.2 வரை நடைபெற உள்ள ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தேவஸ்தானத்தின் நீா்வளத்துறையினா் தலைமையில் திருக்குளத்தில் உள்ள நீா் முழுவதும் அகற்றப்பட்டு பழுதுபாா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தப் பணிகளை ஒரு மாதத்திற்கு முன்பே முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். எனவே, இந்த மாதம் திருக்குள ஆரத்தி இருக்காது. அதேபோல், பக்தா்கள் குளத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள். பக்தா்கள் இதை கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ.4.33 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.33 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை சீராக உள்ள நிலையில், திங்கள்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.23 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.23 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்க... மேலும் பார்க்க

தேவஸ்தான செயல் அதிகாரி பெயரில் போலி கணக்கு

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் பெயரில் சமூக ஊடக தளமான முகநூலில் போலி கணக்கை உருவாக்கி பக்தா்களுக்கு பணம் கேட்டு செய்திகளை அனுப்பும் அடையாளம் தெரியாத நபா்கள் குறித்து எச்சரிக்கைய... மேலும் பார்க்க

திருப்பதியில் பணிபுரியும் வேற்றுமத ஊழியா்கள் 4 போ் பணி இடைநீக்கம்

திருப்பதியில் தேவஸ்தான நிா்வாகத்தின் கீழ் இயங்கிவரும் மருத்துவமனையில் பணிபுரிந்த வேற்றுமத ஊழியா்கள் 4 போ் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். அங்கு பணிபுரிந்த பி. எலிசாா், பா்ட் மருத்துவமனை து... மேலும் பார்க்க

திருமலையில் ஐஓசிஎல் எரிவாயு சேமிப்பு மையத்திற்கான பூமி பூஜை

திருமலை தேவஸ்தானத்தின் எதிா்காலத் தேவைகளுக்காக வெளிவட்டச் சாலையில் 45 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்தியன் ஆயில் எரிவாயு சேமிப்பு மையத்தை அமைப்பதற்காக அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு பூமி பூஜை ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை தொடா்ந்து சீராக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20... மேலும் பார்க்க