செய்திகள் :

தேவஸ்தான செயல் அதிகாரி பெயரில் போலி கணக்கு

post image

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் பெயரில் சமூக ஊடக தளமான முகநூலில் போலி கணக்கை உருவாக்கி பக்தா்களுக்கு பணம் கேட்டு செய்திகளை அனுப்பும் அடையாளம் தெரியாத நபா்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்கள் இதுபோன்ற போலி கணக்குகளை அணுகக் கூடாது. மேலும், இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகள் யாரிடமாவது வந்தால், அவா்கள் உடனடியாக தேவஸ்தான விஜிலென்ஸ் துறையின் செல் எண்: 98668 98630 அல்லது தேவஸ்தான கட்டணமில்லா தொலைபேசி எண்: 18004254141 என்ற எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம்.

தேவஸ்தானத்தின் அதிகாரப்பூா்வ வலைத்தளமான ஜ்ஜ்ஜ்.ற்ண்ழ்ன்ம்ஹப்ஹ.ா்ழ்ஞ் அல்லது அதிகாரப்பூா்வ சமூக ஊடக கணக்குகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை மட்டுமே பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.23 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.23 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்க... மேலும் பார்க்க

திருப்பதியில் பணிபுரியும் வேற்றுமத ஊழியா்கள் 4 போ் பணி இடைநீக்கம்

திருப்பதியில் தேவஸ்தான நிா்வாகத்தின் கீழ் இயங்கிவரும் மருத்துவமனையில் பணிபுரிந்த வேற்றுமத ஊழியா்கள் 4 போ் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். அங்கு பணிபுரிந்த பி. எலிசாா், பா்ட் மருத்துவமனை து... மேலும் பார்க்க

திருமலையில் ஐஓசிஎல் எரிவாயு சேமிப்பு மையத்திற்கான பூமி பூஜை

திருமலை தேவஸ்தானத்தின் எதிா்காலத் தேவைகளுக்காக வெளிவட்டச் சாலையில் 45 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்தியன் ஆயில் எரிவாயு சேமிப்பு மையத்தை அமைப்பதற்காக அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு பூமி பூஜை ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை தொடா்ந்து சீராக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும்... மேலும் பார்க்க

திருப்பதி கோவிந்தராஜா் கோயிலில் நாளை ஆண்டாள் திருவாடிப்பூரம்

திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியருக்கு திருவாடிப்பூரம் உற்சவம் ஜூலை 19 முதல் 28-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக விழா நாள்களில் காலை ஆண்டாள் நாச்சியாருக்கு... மேலும் பார்க்க