செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதி: திடீரெனப் பரவிய காட்டுத்தீ; தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டதா?

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் திடீரென காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயத்தையும், மேகமலை புலிகள் சரணாலயத்தையும் இணைத்து ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அடர்ந்த வனப்பகுதியில் யானை, புலி, கரடி, மிளா, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இப்பகுதியில் பல அறிய வகை மூலிகைச் செடிகளும் உள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம்

இந்நிலையில் வத்திராயிருப்பு அருகே நெடுங்குளம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பீட் 3-ல் திடீரென காட்டுத் தீ பற்றி, தீ மளமளவென எரிந்து வருகிறது. மலைப்பகுதியில் பற்றிய தீ சரணாலயப் பகுதி முழுவதும் பற்றி எரிந்து வருகிறது.

இப்படிப் பற்றி எரியும் காட்டுத் தீயால் பல அரிய வகை மூலிகைகள் பாதிப்படைவதோடு, சிறிய வகை வனவிலங்குகள் பாதிப்பிற்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதன் காரணமாக மலைப்பகுதியில் தீயானது வேகமாகப் பரவி வருகிறது.

காட்டுத்தீ
காட்டுத்தீ

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் தீயானது அணைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

ஆனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயத்தில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட வேண்டியது வனத்துறையின் பொறுப்பு. இப்படி தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும் போது காட்டுத்தீ பரவாமல் இருக்கும்.

இன்று ஏற்பட்டுள்ள இந்தக் காட்டுத் தீயானது வேகமாகப் பரவி வருவதால் தீத் தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டதா எனச் சந்தேகம் எழுகின்றது.

வனப்பகுதியிலுள்ள சில இடங்களில் புற்கள், செடிகள், மரங்கள் போன்றவற்றை வெட்டி அகற்றி, வெற்றுத் தரையிலான ஒரு பாதை போலப் பல கி.மீ., துாரத்திற்கு உருவாக்குவர். இதுதான் தீத்தடுப்பு கோடுகள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

முதுகுளத்தூர்: டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் பலி; ரேஷன் பொருள்கள் வாங்கி வரும் போது நடந்த சோகம்..

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது கூவர் கூட்டம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 80 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் நியாயவிலை கடை இல்லாத நிலையில் அருகில் உள்ள சின்ன பொதிகுளம் கிராமத... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பள்ளிக்கட்டிடம் இடிந்து 4 குழந்தைகள் பலி; இடிபாடுகளில் 17 பேர் காயம்.. என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம் ஜலவார் மாவட்டத்தில் உள்ள மனோஹர் பிப்லோதி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த அரசு பள்ளிக்கட்டிடம் இன்று காலையில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது 40 மாணவர்கள், குழந்... மேலும் பார்க்க

Russia விமான விபத்து: ஒட்டுமொத்தமாக 49 பேர் உயிரிழப்பு - விபத்துக்கான காரணம் என்ன?

கடந்த திங்கள்கிழமை ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் 49 பயணிகளுடன் சென்ற விமானம் சீன எல்லை அருகே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்திலிருந்த அனைவருமே உயிரிழந்துள்ளனர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் ரஷ்ய ... மேலும் பார்க்க

நீலகிரி: 60 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர்; விபரீதத்தில் முடிந்த வழுக்கு மரம் போட்டி!

நீலகிரி மாவட்டம் குன்னூர், சேலாஸ் அருகில் அமைந்திருக்கிறது மேல் பாரதி நகர். ஊரில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வந்திருக்கிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக பாரம்பர்ய சாகச போட்டிகளில் ஒன்றான வழ... மேலும் பார்க்க

கூடலூர்: யானை மிதித்து உயிரிழந்த தொழிலாளி; யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் பலியாகும் அப்பாவிகள்..

யானை - மனித எதிர்கொள்ளல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிகழ்ந்து வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில் மேலும் ஒரு உயிர் பறிபோயிருக்கும் துயரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டே... மேலும் பார்க்க

கழுத்தில் செயின் அணிந்து MRI ஸ்கேன் எடுக்க சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு.. என்ன நடந்தது?

`Final Destination Bloodlines படத்தில் ஒரு காட்சியில், கற்பனைக் கூட செய்ய முடியாதளவு எம்.ஆர்.ஐ ஸ்கேனில் ஒருவர் கொடூரமாக உயிரிழப்பார். அதுபோன்றதொரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. நியூயார்க்கின்... மேலும் பார்க்க