கர்ப்பிணி மனைவியைக் கொன்று, அழுகிய உடலுடன் வாழ்ந்துவந்த இளைஞர்!
பெங்களூர்: பெங்களூரில் 22 வயது கர்ப்பிணி மனைவியைக் கொன்றுவிட்டு, அழுகிய உடலுடன் அதே வீட்டில் இருந்துகொண்டு சாப்பிட்டு, குடித்துக்கொண்டு இயல்பாக வாழ்ந்துவந்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
பெங்களூரில், அக்கம் பக்கத்தினர், ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு தகவல்அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் விரைந்து வந்து அந்த வீட்டை சோதனைசெய்தபோது, அங்கு இறந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருந்துள்ளது.
அந்தப் பெண் இறந்து இரண்டு நாள்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றும், அங்கே உணவுப் பொட்டலங்களும், மது பாட்டில்களும் இருந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.