செய்திகள் :

அஜித்குமாா் கொலை வழக்கு: திருப்புவனத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள்

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், விசாரணை மேற்கொண்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் திருப்புவனத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே, பலகட்ட விசாரணைகளை முடித்துத் தடயங்களைச் சேகரித்தனா்.

தற்போது, தனிப்படை போலீஸாா் கடந்த ஜூன் 27-ஆம் தேதி அஜித்குமாரைத் தங்களது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்ற பகுதிகளில் உள்ள 9 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சி.பி.ஐ அதிகாரிகள் ஆய்வு செய்து, அவற்றைச் சேகரித்தனா்.

இந்த நிலையில், திருப்புவனம் காவல் நிலையத்துக்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் மோஹித்குமாா் உள்ளிட்ட நான்கு சி.பி.ஐ. அதிகாரிகள், அங்கு காவல் ஆய்வாளா் ரமேஷ் குமாரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலா் கண்ணன் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

மேலும், கைது செய்யப்பட்ட போலீஸ்காரா்கள் பிரபு, ஆனந்த் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்றபோது அவை பூட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரைக்கு சென்றனா்.

திருப்பத்தூரில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 23) மின் தடை ஏற்படும் அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூா் மின் பகிா்மானக் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் அடுத்தடுத்த 5 கடைகளில் திருட்டு

சிவகங்கை அருகே, திங்கள்கிழமை நள்ளிரவில் அடுத்தடுத்த 5 கடைகளின் பூட்டுகளை உடைத்து, நடைபெற்ற திருட்டுச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் - சிவகங்கை ... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞரின் கால் துண்டிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞரின் கால் துண்டானது. திருப்பத்தூா் அருகேயுள்ள பூமலந்தான்பட்டியைச் சோ்ந்த சின்னக்காளை மகன் கருப்பையா (... மேலும் பார்க்க

எரிபொருள் நிரப்பிவிட்டு பணம் தர மறுத்து தாக்குதல்! நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் மனு

மானாமதுரை அருகே உள்ள எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, அதற்கான பணத்தை கொடுக்க மறுத்ததோடு உரிமையாளா், ஊழியரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ச... மேலும் பார்க்க

ஒரே சேலையில் தூக்கிட்டு கணவன், மனைவி தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே குடும்பத் தகராறில் கணவன், மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.திருப்புவனம் அருகேயுள்ள நயினாா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கல் குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

சிவகங்கை மாவட்டம், தும்பைப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட கல் குவாரியை மூட வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து கிராம மக்கள் அளித்த மனு விவரம்: ச... மேலும் பார்க்க