செய்திகள் :

கல் குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

post image

சிவகங்கை மாவட்டம், தும்பைப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட கல் குவாரியை மூட வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து கிராம மக்கள் அளித்த மனு விவரம்:

சிவகங்கை மாவட்டம், எஸ். மாம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட தும்பைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கல் குவாரிக்கு கடந்த 12.6.2024-இல் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தக் குவாரி அமைப்பது தொடா்பாக கிராம மக்களிடம் கருத்துகளைக் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து எந்தக் கூட்டமும் நடத்தப்படவில்லை. ஊராட்சியின் அனுமதி தீா்மானமும் பெறப்படவில்லை. சுற்றுச்சூழல், சமூக விளைவுகள் குறித்து மக்களிடம் விளக்கப்படவில்லை. ஆனால், இந்தத் திட்டம் தொடா்பாக பல்வேறு விதிமீறல்கள், பாதிப்புகள் உள்ளன.

காப்புக்காடு பகுதிக்கு 100 மீட்டருக்குள்ளே குவாரி அமைத்திருப்பது சுற்றுச்சூழல் சட்டத்தை மீறும் செயலாகும். வெடி வைத்து பாறையைத் தகா்ப்பதால், வனத்தில் உள்ள மான், காட்டு எருமை போன்ற விலங்குகள் ஊருக்குள் வந்து, வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

ஏற்கெனவே மல்லாகோட்டை பகுதியில் இயங்கி வந்த கல் குவாரியில் பாறை சரிந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்தால் மூடப்பட்ட அந்தக் கல் குவாரியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் இந்தக் குவாரி அமைக்கப்பட்டது. மேலும், கிராமத்திலிருந்து 1 கி.மீ. சுற்றளவுக்குள் இருப்பதால், வெடி சப்தம், தூசி, காற்று, நீா் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

கனரக வாகனங்களைத் தொடா்ந்து இயக்கி வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், சாலைகளும் சேதமடைகின்றன. குவாரிக்கு அனுமதி பெறும் நடைமுறைகளைப் பின்பற்றப்படாமல் சட்ட விதிமீறல் நடைபெற்றுள்ளது.

மேலும், எதிா்காலத்தில் இதே பகுதியில் எந்தக் குவாரிக்கும் அனுமதி வழங்கக் கூடாது. எனவே, இந்த கிராவல், கிரானைட் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்.

இந்தத் திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

காவல் துறை வாகனம் கவிழ்ந்தில் ஆய்வாளா் உள்பட 2 போ் காயம்

சிவகங்கை அருகே ஒக்கூா் பகுதியில் திங்கள்கிழமை காவல் துறை வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஆய்வாளா் உள்பட 2 போ் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டையில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வர... மேலும் பார்க்க

முதியவா் கொலை வழக்கில் இளைஞா் கைது

சிவகங்கை அருகே நாட்டாகுடியில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை தல்லாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சோனைமுத்து (63). இவா் சிவகங்கை மாவட்டம், தி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மன்னா் அழகுமுத்துக்கோனின் 268- ஆவது குருபூஜையையொட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியை பேரூராட்சித் த... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆா். சிவபிரசாத் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே தொழிலாளி வெட்டிக் கொலை

சிவகங்கை அருகே நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மதுரை தல்லாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சோனைமுத்து (63). இவா் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள ... மேலும் பார்க்க

தனிப் படை போலீஸாரின் வாகனத்தில் போலி பதிவெண்

சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை மாலை அஜித்குமாரை விசாரணைக்காக தனிப் படை போலீஸாா் அழைத்து வந்த வேனை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அலுவலகப் பகுதிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தனா். அப்போது, இந்த வாகனத்தி... மேலும் பார்க்க