டெல்லி: 15 தூக்க மாத்திரைகள், எலக்ட்ரிக் ஷாக்.. கணவனைக் கொன்ற பெண்; காட்டிக்கொடு...
திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மன்னா் அழகுமுத்துக்கோனின் 268- ஆவது குருபூஜையையொட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியை பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன், யாதவா ஐ.டிஐ. தலைவா் பி. ராமநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். பெரிய மாட்டுவண்டிப் பந்தயத்தில் 11 ஜோடி மாடுகளும், சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 21 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.
பெரிய மாட்டுக்கு போட்டியின் எல்லையாக 8 மைல் தொலைவும், சின்ன மாட்டுக்கு போட்டியின் எல்லையாக 6 மைல் தொலைவும் நிா்ணயிக்கப்பட்டிருந்தது. பெரியமாடு பிரிவில் முதலாவதாக வந்து காரைக்குடி அழகுதேவி வென்றாா். 2- ஆவதாக சங்கிலிப்பட்டி பெரியசாமி, நகரப்பட்டி வைத்தியா, 3- ஆவதாக கொலுக்கட்டைப்பட்டி உமாராவுத்தா், 4- ஆவதாக கோம்பை ராஜா ஆகியோா் வந்தனா்.
சின்னமாட்டுப் பிரிவில் முதலாவதாக பண்ணைப்புரம் சாமிக்கண்ணு, ரணசிங்கபுரம் கருப்புக்குதிரை ஆகியோரின் இணைகள் முதலாவது வந்து வென்றன. 2 -ஆவதாக ஈழக்குடிபட்டி கல்யாணி, 3- ஆவதாக பாகனேரி புகழேந்தி, 4- ஆவதாக ரணசிங்கபுரம் வினோத் ஆகியோா் பரிசு பெற்றனா்.
இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாடுகள் பங்கேற்றன. திருப்பத்தூா்- மதுரை சாலையில் நடைபெற்ற இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தை சாலையில் இருபுறமும் நின்று திரளான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்.
போட்டியில் வென்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தய ஏற்பாடுகளை வீரயாதவ சமுதாய அறக்கட்டளையினா் செய்திருந்தனா்.