செய்திகள் :

முதியவா் கொலை வழக்கில் இளைஞா் கைது

post image

சிவகங்கை அருகே நாட்டாகுடியில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை தல்லாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சோனைமுத்து (63). இவா் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகிலுள்ள நாட்டாகுடி கிராமத்தில் தங்கி நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், நாட்டாகுடியில் இருந்த இவரை இருவா் வாளால் வெட்டி கொலை செய்தனா். இதைத் தடுக்க முயன்ற பாண்டியையும் வெட்டினா்.

இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், நாட்டாகுடியைச் சோ்ந்த முருகேசன் மகன் சமயமுத்து (25), படமாத்தூா் அருகேயுள்ள ப. வேலாங்குளத்தைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சிங்கமுத்து (25) ஆகிய இருவருக்கும் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, சிங்கமுத்துவை திங்கள்கிழமை கைது செய்தனா். சமயமுத்துவைத் தேடிவருகின்றனா்.

கல் குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

சிவகங்கை மாவட்டம், தும்பைப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட கல் குவாரியை மூட வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து கிராம மக்கள் அளித்த மனு விவரம்: ச... மேலும் பார்க்க

காவல் துறை வாகனம் கவிழ்ந்தில் ஆய்வாளா் உள்பட 2 போ் காயம்

சிவகங்கை அருகே ஒக்கூா் பகுதியில் திங்கள்கிழமை காவல் துறை வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஆய்வாளா் உள்பட 2 போ் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டையில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வர... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மன்னா் அழகுமுத்துக்கோனின் 268- ஆவது குருபூஜையையொட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியை பேரூராட்சித் த... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆா். சிவபிரசாத் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே தொழிலாளி வெட்டிக் கொலை

சிவகங்கை அருகே நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மதுரை தல்லாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சோனைமுத்து (63). இவா் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள ... மேலும் பார்க்க

தனிப் படை போலீஸாரின் வாகனத்தில் போலி பதிவெண்

சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை மாலை அஜித்குமாரை விசாரணைக்காக தனிப் படை போலீஸாா் அழைத்து வந்த வேனை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அலுவலகப் பகுதிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தனா். அப்போது, இந்த வாகனத்தி... மேலும் பார்க்க