செய்திகள் :

ரூ.12 ஆயிரத்திற்குள் அதிக பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்! ஓப்போ கே 13எக்ஸ்!

post image

குறைந்த பட்ஜெட்டில் நிறைவான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஓப்போ கே 13எக்ஸ் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என ஓப்போ தெரிவித்துள்ளது.

இதில், 6000mAh பேட்டரி திறன், 50MP கேமரா, சக்திவாய்ந்த புராசஸர் என அனைத்து நிறைவான அம்சங்களும் உள்ளன. எனினும் இந்திய பயனர்களைக் கவரும் வகையில், குறைந்த விலையிலேயே ஓப்போ கே 13எக்ஸ் ஸ்மாட்ர்போனை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.

அந்தவகையில் சமீபத்தில் இந்த ஆண்டு, கே வரிசை ஸ்மார்ட்போன்களை ஓப்போ அறிமுகம் செய்தது. சமீபத்தில் கே 13எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த ஸ்மார்ட்போன், மக்களின் அன்றாட பயன்பாடுகளுக்குத் தேவையான அம்சங்களை நிறைவாகவே உள்ளடக்கியுள்ளது.

கேமரா தரம் மற்றும் மென்பொருள் போன்றவற்றில் சில குறைபாடுகள் இருந்தாலும், மற்ற அம்சங்களால் இந்த விலைக்கு ஏற்ற தரத்தை ஓப்போ கே 13 எக்ஸ் கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • ஓப்போ கே 13எக்ஸ் ஸ்மார்ட்போனானது ஒலி எதிரொலிப்புகள் இல்லாத மேட் வடிவமைப்பு கொண்டது. மிக எளிமையான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் நிலைத்தன்மை வாய்ந்த புற வடிவத்தைக் கொண்டுள்ளது.

  • 6.67 அங்குல எல்.சி.டி. திரை உடையது. பயன்படுத்துவதற்கு சுமுகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொண்டது. திரையின் பிரகாச அளவு 850 nits கொண்டது.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 6,300 புராசஸர் உடையது.

  • 8GB உள் நினைவகமும் 128GB நினைவகமும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 6000mAh பேட்டரி திறனுடன் வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 45W திறன் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100% எட்டலாம்.

  • 194 கிராம் எடை உடையது. பயன்படுத்த எளிதாக இருக்கும்.

  • தூசு மற்றும் நீர் புகாத்தன்மைக்காக IP54 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • பின்புறம் 50MP மெயின் கேமராவும், 2MP ஜூம் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. பகலில் புகைப்படங்கள் எடுக்க உகந்தது. இரவு நேரங்களில் எடுக்கும் புகைப்படங்களில் தரம் குறைந்து காணப்படுகிறது.

  • இந்திய சந்தைகளில் ஓப்போ கே 13எக்ஸ் விலை ரூ. 11,999.

இதையும் படிக்க |ஜூலை 24-ல் அறிமுகமாகிறது ரியல் மீ 15 ப்ரோ! சிறப்பம்சங்கள் என்னென்ன?

Oppo K13x 5G review: Is it the best mobile phone under ₹12000 with a big battery

பிகாரில் 52 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்! - தேர்தல் ஆணையம்

ராஞ்சி: பிகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.7 லட்சம் போலி வாக்காளர்கள் பதிவு செய்திருப்பது தேர்தல் ஆணையத்தின் வாக்க... மேலும் பார்க்க

கிராமப்புற வேலைவாய்ப்புக்காக மாநிலங்களுக்கு ரூ. 44,000 கோடி விடுவிப்பு: மத்திய அரசு

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு ரூ. 44,323 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் பதிலதித்துள்ளது.நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 21 த... மேலும் பார்க்க

35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம்!

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணிக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வி சேவை ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2016 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளதாகவும் தெரிவித்... மேலும் பார்க்க

தரையிறங்கிய உடனே தீப்பற்றி எரிந்த ஏர் இந்தியா விமானம்: பயணிகள் பத்திரமாக மீட்பு!

புது தில்லி: தரையிறங்கிய உடனே ஏர் இந்தியா விமானம் தீப்பற்றி எரிந்ததால் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.ஏர் இந்தியாவின் ஏஐ 315 விமானம் ஹாங் காங்கிலிருந்து புறப்பட்டு தில்லியில்... மேலும் பார்க்க

ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

பிகாரில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும், சிறப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பு - முன்னாள் முதல்வர் கண்டனம்!

புவனேசுவரம் : ஒடிஸாவில் அண்மைக்காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாக நவீன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆளும் ஒடிஸாவில் காவல் நிலைய விவகாரங்களில் உள்ளூர் தலைவர்களின... மேலும் பார்க்க