செய்திகள் :

காமராஜர் பிறந்த நாள் விழா: விருதுநகரில் மலர்தூவி மரியாதை செலுத்திய மாணவிகள், ஆட்சியர், அமைச்சர்கள்

post image

காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரில் அவரது 123 -வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சிகாலத்தில் அனைவருக்கும் கல்வி, மதிய உணவு திட்டம், நீர் மேலாண்மை, தொழிற்சாலை வளர்ச்சி போன்றவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் சார்பாக மரியாதை

மக்களிள் ஒருவராகவும், எளிமையான முதல்வராகவும் வாழ்ந்து மறைந்த காமராஜர் இன்றுவரை மறக்கமுடியாதவராக இருக்கிறார். பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாளான ஜூலை 15-ம் நாளை 'கல்வி வளர்ச்சி' நாளாக 24.5.2006 அன்று அறிவித்து ஆணை வெளியிட்டனர். அது முதல் காமராசர் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விருதுநகரில் சுலோச்சன் தெருவில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது திருவுருவ சிலைக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், வணிக பிரமுகர்கள், நகர் பிரமுகர்கள் பொதுமக்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

பின்னர் விருதுநகர் மதுரை சாலையில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

``சாப்பாடு போடுறோம்; ஆனா, ஓட்டு போட மாட்டோம்'' -பாஜக தொண்டர் பேச்சால் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் பாஜக பூத் கமிட்டி அமைத்து வருகிறது. இந்நிலையில், விருதுநகரில் திடீரென பூத் கமிட்டி ஆய்வுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தருவதாக தகவல் வெளியானது.இந்நிலையில்... மேலும் பார்க்க

ரூ.25000 கோடி வங்கி ஊழல்: சரத்பவார் பேரன் மீது ED குற்றப்பத்திரிகை; மகா. துணை முதல்வர் பெயர் நீக்கம்

மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மாநிலம் முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகளுக்குக் கடன் வழங்கி வருகிறது. அதேசமயம் கடன் வாங்கி திரும்ப செலுத்ததாக சர்க்கரை ஆலைகளை வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்து, அதனை ஏலம் விட்டு... மேலும் பார்க்க

``5 ஆண்டில் 10 மடங்கு அதிகரித்த அமைச்சரின் சொத்து.. எப்படி?'' - வருமான வரித்துறை நோட்டீஸ்

மகாராஷ்டிராவில் சமூக நீதித்துறை அமைச்சராக இருப்பவர் சஞ்சய் ஷிர்சாத். துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ஷிர்சாத் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது தன... மேலும் பார்க்க

PMK: Facebook சண்டை தொடங்கி அடிதடி வரை; இரு கோஷ்டியாகி மோதும் தொண்டர்கள்; என்ன செய்யப் போகிறது பாமக?

பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில நாள்களாக கருத்து மோதல் நிலவி வருகிறது. இருவரும் தனித்தனியாக நிர்வாகிகள் சந்திப்பு, பதவி நியமனம், பதவி பறிப்பு போன்றவற்றைச் செய்து வரு... மேலும் பார்க்க

`மீடியா பெர்சன் கெட் அவுட்' - மேடையில் கத்திய வைகோ; தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்.. என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், நெல்லை மண்டல மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ முன்னிலையில் நடைபெற்றது. இதில் நெல்லை மண்டலத்தில் உள்ள தூத்துக்குடி, கன... மேலும் பார்க்க

100 ரூபாய்க்கு 20 எலுமிச்சை; தொழில் துறையினருக்கு வாக்குறுதி.. எடப்பாடி பழனிசாமி கோவை ரவுண்ட் அப்

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் இருந்து தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார். நேற்ற... மேலும் பார்க்க