செய்திகள் :

100 ரூபாய்க்கு 20 எலுமிச்சை; தொழில் துறையினருக்கு வாக்குறுதி.. எடப்பாடி பழனிசாமி கோவை ரவுண்ட் அப்

post image

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் இருந்து தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார். நேற்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகளில் அவர் பிரசார பேருந்தில் பயணம் செய்து மக்களிடம் உரையாடினார்.

எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி.வேலுமணி

இரண்டாவது நாளான இன்று கோவை தெற்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதிகளில் பயணம் செய்து வருகிறார்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி வெள்ளைச் சட்டை, டிராக் பேன்ட் அணிந்து நடைப்பயிற்சி மேற்கொண்டு, அங்கு உடற்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் உரையாடினார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “2024 - 25  நிதியாண்டில் உபரி வருவாய் கிடைத்தும், திமுக அரசு கடன் வாங்கியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். திமுக ஊழல் குறித்தும் கமிஷன் அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள், மக்களுடன் தேநீர் அருந்தினார். சாலையோர வியாபாரியிடம் ரூ.100 கொடுத்து 20 எலுமிச்சைபழங்களை வாங்கினார்.

பிறகு கோவை குறு, சிறு தொழில்துறையினர், மகளிர் சுய உதவிக் குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல் நடத்தினார். அப்போது தொழில்துறையினர் கோரிக்கைகளுக்கு பதிலளித்த அவர், “மின் கட்டண உயர்வால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார நிலைக்கட்டண பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நம் ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் மானிய விலையில் அம்மா இரு சக்கரம் வழங்கப்படும்.” என்றார்.

இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து இன்று மதியம் மாற்றுக் கட்சியினர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி

அதன் பிறகு மாலை வடவள்ளி பகுதியில் இருந்து மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளில் உரையாற்றவுள்ளார்.

``நீதிக்காக வன்முறையில் ஈடுபடுவோம்'' - 20 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கரே சகோதரர்கள் மேடையில் பேச்சு

மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் 1-5 வது வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதோடு போராட்டமும் நடத்தப்போவதாக மகாராஷ்டிரா முன்னா... மேலும் பார்க்க

பாஜக: புதுச்சேரி, மகா. உட்பட 9 மாநிலங்களுக்குப் புதிய தலைவர்கள்; தேசியத் தலைவர் தேர்தல் எப்போது?

பா.ஜ.க-விற்குத் தேசியத் தலைவர் தேர்தல் நடத்துவது தொடர்ந்து தாமதமாகிக்கொண்டே வருகிறது. ஏற்கெனவே பா.ஜ.க-விற்கு 28 மாநிலங்களில் உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு புதிய மாநிலத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுவிட்... மேலும் பார்க்க

``செவி வழி செய்தியை மட்டுமே அடிப்படையாக கொண்டு பேசக் கூடாது.." - சீமான் குறித்து மனோ தங்கராஜ்

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பதற்கு கடன் வழங்கும் திட்டத்தை மேம்படுத்தியுள்ளோம். அனைத்து சங்கங்களையும்... மேலும் பார்க்க

"மதுரைக்குப் போகாமலேயே முருகர் அருள் கிடைத்துவிட்டது" - வேலைப் பரிசாக வாங்கிய இபிஎஸ் மகிழ்ச்சி

காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பரிவு தேசிய பொதுச் செயலாளர் வி.எம்.சுப்பிரமணியம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் ... மேலும் பார்க்க

சிவசேனா தொடக்கத் தினம்: "என்னை வந்து சாகடியுங்கள்" - வார்த்தை போரில் உத்தவ் - ஷிண்டே; பின்னணி என்ன?

மகாராஷ்டிராவில் சிவசேனா தொடக்கத் தினம் சிவசேனாவின் இரண்டு அணிகள் சார்பாகக் கொண்டாடப்பட்டது.தனித்தனியாக நடந்த பொதுக்கூட்டங்களில் உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

மருத்துவமனையில் பாமக MLAகள்: "உடல்ரீதியாக, மனரீதியாகக் குணமடையக் கூட்டுப் பிரார்த்தனை" - அன்புமணி

பா.ம.க உட்கட்சி விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.இதனால் தனித்தனியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் நிர்வாக... மேலும் பார்க்க