செய்திகள் :

`விமான அவசரம்' - பயணத்தில் மனைவியை மறந்துவிட்டு சென்ற அமைச்சர் சிவராஜ் சிங்.. என்ன நடந்தது?

post image

பயண அவசரத்தில் டிக்கெட்டை எடுக்காமல் சென்றுவிடுவதைப்பற்றி கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் பயண அவசரத்தில் தனது மனைவியையே மறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான் தனது மனைவி சாதனா சிங்குடன் குஜராத்திற்கு அரசு மற்றும் ஆன்மிக சுற்றுப்பயணம் வந்திருந்தார்.

அவர்கள் குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில், கிர் வன விலங்குகள் சரணாலயம் போன்ற இடத்திற்கு சென்றுவந்தனர். சோம்நாத் கோயிலில் சிவ்ராஜ் சிங் செளகான் தியானம் இருந்து வழிபட்டார். கிர் தேசிய விலங்குகள் சரணாலயத்தில் இருவரும் சிங்கங்களை பார்வையிட்டனர். அவற்றை பார்த்துவிட்டு ஜுனாகாட் என்ற இடத்தில் உள்ள ஓய்வு விடுதியில் தனது மனைவியை இருக்க சொல்லிவிட்டு நிலக்கடலை ஆராய்ச்சி மையத்திற்கு சிவ்ராஜ் சிங் செளகான் சென்றார்.

அங்கு பெண்களுடன் கலந்தாய்வில் ஈடுபட்டிருந்தார். மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து அவர்களிடம் பேசினார். அப்போது அவர் அடிக்கடி தனது கைக்கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

சிவ்ராஜ் சிங் செளகான் பேசிக்கொண்டிருந்த போது பாதியிலேயே தனது உரையை நிறுத்திவிட்டு, அடுத்தமுறை விரிவாக பேசுகிறேன் என்று கூறிவிட்டு அவசரமாக புறப்பட்டார். சாலைகள் மோசமாக இருப்பதால் சூரத் சென்று விமானத்தை பிடிப்பது தாமதமாகிவிடும் என்று கருதி உடனே சூரத் செல்லும்படி சிவ்ராஜ் சிங் செளகான் கேட்டுக்கொண்டார்.

விமான நிலையம்

சிவ்ராஜ் சிங் செளகானுடன் 22 கார்கள் சூரத் நோக்கிச் சென்றது. கார்கள் வேகமாக சென்று கொண்டிருந்தபோது 10 நிமிடம் கழித்துத்தான் திடீரென சிவ்ராஜ் சிங்கிற்கு தனது மனைவியும் தன்னுடன் வந்தது நினைவுக்கு வந்தது. அதோடு அவரை ஜுனாகாட்டில் விட்டுவிட்டு வந்திருப்பது ஞாபகத்திற்கு வந்தது. உடனே அவர் தனது மனைவிக்கு போன் செய்து பேசினார். வண்டியை திருப்புங்க, வண்டியை திருப்புங்க என்று கூறிய சிவ்ராஜ் சிங் செளகான் மீண்டும் அனைத்து வாகனங்களுடன் ஜுனாகாட் சென்றார்.

அங்கு தனது மனைவியை அழைத்துக்கொண்டு மீண்டும் சூரத் விமான நிலையத்திற்கு சென்றார். மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான் தன்னுடன் மனைவி வந்தது கூட நினைவில்லாமல் மனைவியைவிட்டுவிட்டு சென்றது சமூக வலைத்தள பக்கத்தில் கடுமையான விமர்சிக்கப்பட்டு வருகிறது.

``ஆட்டோ டிரைவர்தான் என்னிடம் முதலில்..." - வைரலான வீடியோ குறித்து சினேகா மோகன்தாஸ் விளக்கம்

நடிகரும், எம்.பி-யுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மகளிர் அணி நிர்வாகியாக இருப்பவர் சினேகா மோகன்தாஸ் (32). ஃபுட் பேங்க் இந்தியா (உணவு வங்கி) என்ற அறக்கட்டளையின் நிறுவனராகவும் இருக்கும் இவ... மேலும் பார்க்க

Transformation: `விமர்சனங்களும் புறக்கணிப்புகளும்' - ஓரே போட்டோ மூலம் சர்ஃபராஸ் கொடுத்த சர்ப்ரைஸ்!

இந்தியா கிரிக்கெட் வீரர்களில் கவனம் பெற்றவர்களில் ஒருவர் சர்ஃபராஸ் கான். கடந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சர்ஃபராஸ் கான், இந்திய அணியில் இடம்பிடித்த போதிலும்... மேலும் பார்க்க

`ஒரே பெண்ணை திருமணம் செய்த 2 சகோதரர்கள்' - பாரம்பர்ய பின்னணி குறித்து ஹட்டி இன மக்கள் சொல்வதென்ன?

ஒரு ஆணை இரண்டு பெண்கள் திருமணம் செய்வதைப்பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் ஹிமாச்சல பிரதேசத்தில் ஒரு பெண் இரண்டு சகோதரர்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளார். அங்குள்ள சிர்மௌர் மாவட்டத்தில் டிர... மேலும் பார்க்க

Coldplay இசை நிகழ்ச்சியில் ஷாக்; கிஸ் கேமில் சிக்கிய CEO; ஆஸ்ட்ரோனமர் நிறுவனம் சொல்வது என்ன?

ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆண்டி பைரன் மற்றும் மனித வளத்துறை அலுவலர் கிறிஸ்டின் கபோட் Coldplay இசை நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்துகொண்ட வீடியோ வைரலாகியிருப்பது நிறுவனத்துக்குள்... மேலும் பார்க்க

கழுத்தளவு நீரில், மைக்குடன் நேரலை.. பாகிஸ்தான் பத்திரிகையாளர் வெள்ளத்தில் சென்றதால் அதிர்ச்சி!

பாகிஸ்தானில் கடந்த ஜூன் 26 முதல் பெய்துவரும் கனமழையால் பஞ்சாப் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.இந்த வெள்ள பாதிப்பில் குறைந்தது 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ... மேலும் பார்க்க

6 முறை எம்எல்ஏ; மத்திய அமைச்சர்; கோவாவின் புதிய கவர்னர்.. எளிமையாக வாழும் `அசோக் கஜபதி ராஜு' யார்?

சமீபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு லடாக், கோவா, ஹரியானாவுக்கு புதிய கவர்னர்களை நியமித்திருந்தார். இதில், ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கஜபதி ராஜு, கோவாவின் கவர்னராக ... மேலும் பார்க்க