செய்திகள் :

ஜகதீப் தன்கர் ராஜிநாமா ஏன்? எதிர்க்கட்சித் தலைவர்களின் சந்தேகமும் கருத்தும்!

post image

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் ராஜிநாமா குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று காலை தொடங்கியது. மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கரும் அவைக்கு தலைமைத் தாங்கினார். மேலும், பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களுடன் வழக்கம்போல் சகஜமாகப் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றிரவு மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு தன்கர் கடிதம் எழுதினார்.

இந்த செய்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜகதீப் தன்கரின் ராஜிநாமா குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:

“ராஜிநாமாவுக்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும். இதைப் பற்றி நாங்கள் எதுவும் கூற முடியாது. மத்திய அரசு அல்லது அவருக்குத் தெரியும். அவரது ராஜிநாமாவை ஏற்றுக்கொள்வதும் ஏற்காததும் அரசிடம் உள்ளது.” எனத் தெரிவித்தார்.

திமுக மூத்த எம்பி டி. ஆர். பாலு, அழுத்தம் காரணமாக தன்கர் ராஜிநாமா செய்திருப்பதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கெளரவ் கோகோய் கூறியதாவது:

”மத்திய அரசுக்கு குடியரசு துணைத் தலைவருக்கும் இடையேயான உறவு முன்பு போல் இல்லை எனத் தெரிகிறது. ஏனென்றால், நேற்று தன்கர் நடத்திய கூட்டத்தில் ஒரு அமைச்சர்கூட இல்லை.

குடியரசுத் துணைத் தலைவர் தனது உடல்நிலை காரணமாக ராஜிநாமா செய்யவுள்ளது அவர்களுக்கு முன்பே தெரிந்திருந்ததா? இல்லையெனில், ஏன் இதுபோன்ற குழப்பம்? நாங்கள் இதனை அறிய விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்,

சமாஜவாதி கட்சியின் அவதேஷ் பிரசாத் கூறியதாவது:

“நேற்றைய கூட்டத்தில் அவரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை போன்று தெரியவில்லை. இந்த செய்தியை அறிந்ததும் நேற்றிரவு அதிர்ச்சி அடைந்தேன்.

அவர் தனது உடல்நிலையை மேற்கோள் காட்டி ராஜிநாமா செய்திருப்பதால் எதுவும் சொல்ல முடியாது. அவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகௌம் இருக்க பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Opposition leaders have expressed their views on the resignation of Vice President Jagdeep Dhankhar.

இதையும் படிக்க : ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்க..! - ஜகதீப் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள்

ரூ.12 ஆயிரத்திற்குள் அதிக பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்! ஓப்போ கே 13எக்ஸ்!

குறைந்த பட்ஜெட்டில் நிறைவான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஓப்போ கே 13எக்ஸ் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என ஓப்போ தெரிவித்துள்ளது.இதில், 6000mAh பேட்டரி திறன், 50... மேலும் பார்க்க

ஜீவனாம்சமாக ரூ.12 கோடி, பிஎம்டபிள்யு, மும்பை வீடு கேட்ட பெண்! பதில் கொடுத்த உச்ச நீதிமன்றம்

படித்த, திறமையான பெண்கள், தங்களது வாழ்வாதாரத்துக்காக, தாங்கள்தான் சம்பாதிக்க வேண்டும், ஜீவனாசம் என்ற பெயரில், கணவரிடமிருந்து இடைக்கால பராமரிப்புகளைக் கேட்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெர... மேலும் பார்க்க

ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவுக்கு ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளது: காங்கிரஸ்!

குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவில் ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளதாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை திங்கள்கிழமை தி... மேலும் பார்க்க

காதலை மறுத்தப் பெண்ணை பிணைக் கைதியாகப் பிடித்த இளைஞர்! தீரத்துடன் மீட்டவருக்கு குவியும் பாராட்டு!!

மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டிய நிலையில், தீரத்துடன் பெண்ணை மீட்டவருக்கு பாராட்டுகள் குவிகிறது.இளம... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் நாள் முழுவதும் முடக்கம்! மக்கள் பணம் வீணாவதாக மத்திய அமைச்சர் காட்டம்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.இந்த நிலையில், மக்களின் பணத்தை எதிர்க்கட்சியினர் வீணடிப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிர... மேலும் பார்க்க

சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன்!

மறைந்த மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன், சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் என்ற பெருமைக்குரியவர்.கேரளத்தின் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய... மேலும் பார்க்க