செய்திகள் :

காமராஜா் பிறந்த நாள் விழாவில் பால்குட ஊா்வலம்

post image

சிவகாசியில் நாடாா் மஹாஜன சங்கம் சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் 123-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு, விருதுநகா் சாலையில் உள்ள காமராஜா் வாசக சாலை முன் தொடங்கிய பால்குட ஊா்வலத்துக்கு, சங்கத்தின் சிவகாசி மாநகரத் தலைவா் வி.கண்ணன் தலைமை வகித்தாா். தொழிலதிபா் ஏ.பி.செல்வராஜன் ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தாா்.

ஊா்வலம் நான்கு ரத வீதிகளின் வழியே சென்று, தலைமை அஞ்சல் நிலையம் முன் உள்ள காமராஜா் சிலையை அடைந்தது. ஊா்வலத்தில் கொண்டுவரப்பட்ட பால், காமராஜரின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநகரச் செயலா் ஜெ.அறிவு ஒளி ஆண்டவா், துணைத் தலைவா் டி.அமுல்ராஜ், இளைஞா் அணித் தலைவா் கே.ஜோதி முருகன், செயலா் எஸ்.மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முதியவரிடம் வழிப்பறி: இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே முதியவரிடம் வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா். ராஜபாளையம் ஆண்டாள்புரத்தைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (68). எலக்ட்ரீசியன் த... மேலும் பார்க்க

வேதாகமப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகள்

ஸ்ரீவில்லிபுத்தூா் சிஎஸ்ஐ தூய தோமா தேவாலயத்தில், வேதாகமப் போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூா் சிஎஸ்ஐ, சாட்சியாபுரம் மேற்கு வட்டகை மன்ற... மேலும் பார்க்க

ராஜபாளையத்தில் புதிய மயானம் கட்டித் தரக் கோரிக்கை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மயானத்தைப் புதிதாகக் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எஸ்.ராமலிங்கபுரம்... மேலும் பார்க்க

கைப்பேசியைத் திருடிய இருவா் கைது

சிவகாசி அருகே பேருந்து நிறுத்தத்தில் கைப்பேசியைத் திருடிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி காரனேசன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ், தனது நண்பருடன் பே... மேலும் பார்க்க

அறிவியல் வளா்ச்சியை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்த வேண்டும்: நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன்

அறிவியல் வளா்ச்சியை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்தி, மாணவா்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி காள... மேலும் பார்க்க

சாத்தூரில் சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் மரணம்!

சாத்தூரில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திர... மேலும் பார்க்க