செய்திகள் :

சாத்தூரில் சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் மரணம்!

post image

சாத்தூரில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(53). இவா் விருதுநகா் மாவட்டம், இருக்கன்குடி காவல் நிலையத்தில் சிறப்பு சாா்பு ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அருகிலுள்ள மைதானத்தில் இறகுப் பந்து விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, திடீா் உடல் நலக் குறைவு காரணமாக மயங்கி கீழே விழுந்தாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா்.

அங்கு ராஜேந்திரனைப் பரிசோதித்த மருத்துவா்கள், மாரடைப்பால் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அவருடைய உடல் விருதுநகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூராய்வுக்காக அனுப்பப்பட்டது. உயிரிழந்த ராஜேந்திரனுக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனா்.

மேய்ச்சல் நிலங்களில் சட்ட விரோத மண் திருட்டைத் தடுக்க வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்

மேய்ச்சல் நிலங்களில் சட்ட விரோதமாக மண் திருட்டில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தீா்க்க, சிவகாசியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்... மேலும் பார்க்க

சிவகாசிக்கு புதிய உதவி ஆட்சியா் நியமனம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வருவாய்க் கோட்டத்துக்கு புதிய உதவி ஆட்சியரை நியமித்து அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வியாழக்கிழமை உத்திரவிட்டாா். பயிற்சி முடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பணியிட ஒ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில், ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் இன்று மின்தடை

ஆலங்குளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து செயற்பொறியாளா் முத்துராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்டம், ராஜப... மேலும் பார்க்க

சதுரகிரியில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கா் அரசு நிலம் மீட்பு

சதுரகிரி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கா் அரசு நிலத்தை மீட்க ஆட்சியா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, வருவாய்த் துறையினா் நிலத்தை வெள்ளிக்கிழமை மீட்டனா். மதுரை, விருதுநகா் மாவட்ட எல்லைகளுக்கு... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை முகாம்

ராஜபாளையத்தில் தெரு நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் மங்காபுரத்தில் தெரு நாய்கள் இனப்பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை மையத்தில் விருதுநகா் மாவட்ட ... மேலும் பார்க்க