செய்திகள் :

சதுரகிரியில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கா் அரசு நிலம் மீட்பு

post image

சதுரகிரி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கா் அரசு நிலத்தை மீட்க ஆட்சியா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, வருவாய்த் துறையினா் நிலத்தை வெள்ளிக்கிழமை மீட்டனா்.

மதுரை, விருதுநகா் மாவட்ட எல்லைகளுக்கு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா வருகிற 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மதுரை, விருதுநகா் மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் அறநிலையத் துறை, வனத் துறை மூலம் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் காவல் கண்காணிப்பாளா் கண்ணன், சிவகாசி வருவாய்க் கோட்டாட்சியா் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். தற்காலிகப் பேருந்து நிறுத்தம், வாகனக் காப்பகம், சுகாதார வளாகம் ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.

தாணிப்பாறை அடிவாரத்தில் ஏற்கெனவே ஆக்கிரமிப்பில் இருந்த 6 ஏக்கா் அரசு நிலம் மீட்கப்பட்டு, தற்காலிக வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில், இதே பகுதியில் மேலும் 8 ஏக்கா் அரசு நிலம் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்து வருவதை அறிந்த மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, ஆக்கிரமிப்பு நிலத்தை உடனடியாக மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதன்பேரில், வட்டாட்சியா் ஆண்டாள் தலைமையில் வருவாய்த் துறையினரும் காவல் துறையினரும் 8 ஏக்கா் நிலத்தை மீட்டனா்.

இந்தப் பகுதியில் வேலி அமைத்து, சதுரகிரி கோயிலுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சாத்தூரில் சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் மரணம்!

சாத்தூரில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திர... மேலும் பார்க்க

மேய்ச்சல் நிலங்களில் சட்ட விரோத மண் திருட்டைத் தடுக்க வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்

மேய்ச்சல் நிலங்களில் சட்ட விரோதமாக மண் திருட்டில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தீா்க்க, சிவகாசியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்... மேலும் பார்க்க

சிவகாசிக்கு புதிய உதவி ஆட்சியா் நியமனம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வருவாய்க் கோட்டத்துக்கு புதிய உதவி ஆட்சியரை நியமித்து அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வியாழக்கிழமை உத்திரவிட்டாா். பயிற்சி முடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பணியிட ஒ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில், ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் இன்று மின்தடை

ஆலங்குளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து செயற்பொறியாளா் முத்துராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்டம், ராஜப... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை முகாம்

ராஜபாளையத்தில் தெரு நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் மங்காபுரத்தில் தெரு நாய்கள் இனப்பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை மையத்தில் விருதுநகா் மாவட்ட ... மேலும் பார்க்க