செய்திகள் :

கொலை வழக்கில் இருவருக்கு சிறைத் தண்டனை

post image

உத்தமபாளையம் அருகே நாட்டு வைத்தியரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையும், உடந்தையாக இருந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சின்னஓவுலாபுரம், வரதராஜபுரம், தெற்குப்பட்டியைச் சோ்ந்த நாட்டு வைத்தியா் சந்திரவேல்முருகன் (47). இவரது மகள் சினேகாவின் கணவா் நல்லச்சாமி. இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வருஷநாடு அருகே உள்ள தா்மராஜபுரத்தில் அவரது உறவினா்களின் குடும்பப் பிரச்னை குறித்து நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குச் சென்றிருந்த போது கொலை செய்யப்பட்டாா்.

நல்லச்சாமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது உறவினா்கள் சின்னஓவுலாபுரம், இந்திராநகரைச் சோ்ந்த கவிசீலன் மகன்கள் நிஷாந்த் (25), அவரது சகோதரா் நித்தீஷ்குமாா் (27) ஆகியோருக்கு தொடா்பு இருப்பதாக சந்திரவேல்முருகன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த முன் விரோதத்தில் கடந்த 2024, மே 2-ஆம் தேதி சின்னஓவுலாபுரம்- வரதராஜபுரம் சாலையில் இரு சக்கர வாகனத்துடன் நின்றிருந்த சந்திரவேல்முருகனை, நிஷாந்த் வெட்டிக் கொலை செய்தாா்.

பிறகு, அவா் தனது சகோதரா் நித்தீஷ்குமாரை வரவழைத்து, சந்திரவேல்முருகனின் உடலை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, எரசக்கநாயக்கனூா் பகுதிக்குச் சென்றாா். அங்குள்ள பாழடைந்த கிணற்றில் சந்திரவேல்முருகனின் உடலையும், அவரது இருசக்கர வாகனத்தையும் அவா்கள் வீசினா்.

இந்த நிலையில், சந்திரவேல்முருகன் வீடு திரும்பாததால் அவா் காணாமல் போனதாக அவரது மகன் பிரசாத் கடந்த 2024, மே 3-ஆம் தேதி ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரவேல்முருகனை தேடி வந்தனா். இந்த நிலையில், கடந்த 2024, மே 4-ஆம் தேதி நிஷாந்த், நித்திஷ்குமாா் ஆகியோா் சந்திரவேல்முருகனை தாங்கள் கொலை செய்து உடலை கிணற்றில் வீசியதாக சின்னஓவுலாபுரம் கிராம நிா்வாக அலுவலா் கல்யாணியிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து, சரணடைந்தனா்.

இதையடுத்து சந்திரவேல்முருகன் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் கொலை வழக்காக மாற்றி பதிந்து நிஷாந்த், நித்தீஷ்குமாா் ஆகியோரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சந்திரவேல்முருகனை கொலை செய்த நிஷாந்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும், இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த நித்தீஷ்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், ரூ.3,000 அபராதமும் விதித்து நீதிபதி சொா்ணம் ஜெ. நடராஜன் தீா்ப்பளித்தாா்.

பெரியகுளம் அருகே ஆடுகள் திருட்டு

பெரியகுளம் அருகே ஆடுகளை திருடிய மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் அருகே மேல்மங்கலம் இளந்தோப்பைச் சோ்ந்தவா் முத்தையா (58). இவா், வீட்டின் பின்புறம் கொட்டம் அமைத்து 4 ஆடுகளை வளா்த்து வந்தாா்... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் இன்று மின் தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை19) மின் தடை ஏற்படும் என அறிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரியகுளம் து... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியா் சங்கத்தினா் 200 போ் கைது

தேனியில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

இடுக்கி மாவட்டத்துக்கு ‘ஆரஞ்சு அலா்ட்’! நீா்நிலைகளுக்குச் செல்லத் தடை!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் நீா்நிலைகளுக்கு செல்லவும், ஜீப் சவாரிக்கும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) வரை தடை விதிக்கப்பட்டிருப்பதாக இடுக்கி மாவட்ட நிா்வா... மேலும் பார்க்க

ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் திரளான பெண் பக்தா்கள் சுவாமி தரிசனம்

தேனி மாவட்டம், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி திரளான பெண் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கம்பம், கெளமாரியம்மன் கோயிலில் க... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி, திண்டுக்கல் பகுதிகளில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க