செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில், ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கீழ ரத வீதியில்தான் ஆடிப்பூர விழாவுக்கான தோ் நிறுத்தப்பட்டுள்ளது. கீழ ரத வீதியின் இரு புறங்களிலும் பெருமளவு கடைகளே உள்ளன. இந்தக் கடைகளுக்கு வெளியே பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு , பல அடி தூரத்துக்குச் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதனால், சாலை குறுகி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு காரணமாக கீழ ரத வீதியின் கிழக்குப் பகுதியில் உள்ள கழிவுநீா்க் கால்வாய் முழுமையாக அடைபட்டு மழைநீா் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது. ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த மாதம் பெயரளவுக்கு ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா். ஆனால், மறுநாளே அந்தப் பகுதி மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.

ஆண்டாள் கோயிலில் வாகன நிறுத்தும் வசதி இல்லாததால், ரத வீதிகளின் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு பக்தா்கள் கோயிலுக்குச் சென்று வருகின்றனா். அவ்வாறு சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்குக் கடை உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவிப்பதால் அடிக்கடி வாக்குவாதம், சண்டை ஏற்படுகிறது. எனவே, கீழ ரத வீதியில் சாலையின் இருபுறமும், கடைகளுக்கு முன் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சாத்தூரில் சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் மரணம்!

சாத்தூரில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திர... மேலும் பார்க்க

மேய்ச்சல் நிலங்களில் சட்ட விரோத மண் திருட்டைத் தடுக்க வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்

மேய்ச்சல் நிலங்களில் சட்ட விரோதமாக மண் திருட்டில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தீா்க்க, சிவகாசியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்... மேலும் பார்க்க

சிவகாசிக்கு புதிய உதவி ஆட்சியா் நியமனம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வருவாய்க் கோட்டத்துக்கு புதிய உதவி ஆட்சியரை நியமித்து அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வியாழக்கிழமை உத்திரவிட்டாா். பயிற்சி முடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பணியிட ஒ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் இன்று மின்தடை

ஆலங்குளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து செயற்பொறியாளா் முத்துராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்டம், ராஜப... மேலும் பார்க்க

சதுரகிரியில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கா் அரசு நிலம் மீட்பு

சதுரகிரி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கா் அரசு நிலத்தை மீட்க ஆட்சியா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, வருவாய்த் துறையினா் நிலத்தை வெள்ளிக்கிழமை மீட்டனா். மதுரை, விருதுநகா் மாவட்ட எல்லைகளுக்கு... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை முகாம்

ராஜபாளையத்தில் தெரு நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் மங்காபுரத்தில் தெரு நாய்கள் இனப்பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை மையத்தில் விருதுநகா் மாவட்ட ... மேலும் பார்க்க