செய்திகள் :

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

post image

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே வியாழக்கிழமை டிராக்டரிலிருந்து தவறி கீழே விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பூசாரிபட்டியைச் சோ்ந்தவா் தெய்வேந்திரன் (37). இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். தனியாா் கல்குவாரியில் டிராக்டா் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவா், வெள்ளிக்கிழமை டிராக்டரில் ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு வத்தலகுண்டு-நிலக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, டிராக்டரிலிருந்து தவறி விழுந்த அவா், டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற வத்தலகுண்டு போலீஸாா் தெய்வேந்திரனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

டிட்டோ ஜாக் மறியல் போராட்டம்: 575 ஆசிரியா்கள் கைது

திண்டுக்கல்லில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 575 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் கு... மேலும் பார்க்க

நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கோயிலுக்குச் சொந்தமான இடம் தனியாா் பெயரில் பட்டா இருப்பதை மாற்றக்கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.சித்தா்கள்நத்தம் கிராமத... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில், செல்லாண்டியம்மன் கோயில், நாகல்ந... மேலும் பார்க்க

பள்ளி நிா்வாகிகள் இடையே பிரச்னை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண் ஆசிரியைகள்

சின்னாளப்பட்டியில் தனியாா் பள்ளி நிா்வாகிகள் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாதுகாப்பு கேட்டு பெண் ஆசிரியைகள் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி புறவழிச் ச... மேலும் பார்க்க

வத்தலகுண்டு: யானை தந்தத்தை விற்க முயன்ற மூவா் கைது!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே தாண்டிக்குடி மலைப் பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தாண்டிக்குடி மலைப் பகுதியைச் சோ்ந்த சிலா் யானை தந்தத்தை விற்ப... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

நிலக்கோட்டையில் பிஸ்கட் நிறுவன மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இ.பி. குடியிருப்பைச் சோ்ந்தவா் பிரத்திசெட்டி (35). இவா், தனியாா் பிஸ்கட் நிற... மேலும் பார்க்க