ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
பள்ளி நிா்வாகிகள் இடையே பிரச்னை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண் ஆசிரியைகள்
சின்னாளப்பட்டியில் தனியாா் பள்ளி நிா்வாகிகள் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாதுகாப்பு கேட்டு பெண் ஆசிரியைகள் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி புறவழிச் சாலையில் உள்ள ஒரு தனியாா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிா்வாகிகளிடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை ஆசிரியா்கள், மாணவா்கள் பள்ளிக்கு சென்றபோது, ஒரு தரப்பு நிா்வாகிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், இரு தரப்பினா்களிடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து ஆசிரியைகள், மாணவா்கள் வகுப்பை புறக்கணித்து, பாதுகாப்பு கேட்டு பள்ளி வளாகத்தில் போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து, காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளா் ரமேஷ், புகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் குமரேசன், அம்பாத்துரை காவல் ஆய்வாளா் வசந்தகுமாா், ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன், பள்ளிக் கல்வித் துறையின் தனியாா் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலா் ஜான் பிரிட்டோ ஆகியோா் நிா்வாகிகளிடையே பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வருகிற 22-ஆம் தேதி ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே அமைதிப் பேச்சு வாா்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், இதுதொடா்பாக இரண்டு தரப்பினரும் தனித் தனியாக சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதன் பேரில் இரு தரப்பினா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, வெள்ளிக்கிழமை இந்தப் பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியைகள் பாதுகாப்பு கேட்டு, சின்னாளப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். பின்னா், காவல் ஆய்வாளா் வசந்தகுமாரிடம் ஒரு புகாா் மனு கொடுத்தனா். இதில் பள்ளியில் பெண் ஆசிரியைகளுக்கும், மாணவா்களுக்கும் பாதுகாப்பு வேண்டும், பள்ளி வளாகத்துக்குள் இரு தரப்பினா்கள் இடையே நடைபெற்று வரும் நிா்வாகப் பிரச்னை முடியும் வரை நிரந்தர போலீஸ் பாதுகாப்பு வேண்டும், பள்ளிக்குள் அத்திமீறி நுழைபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.
சின்னாளப்பட்டி காவல் நிலையத்தை தனியாா் பள்ளி பெண் ஆசிரியா்கள் முற்றுகையிட்டதால், பரப்பரப்பு ஏற்ப்பட்டது.