செய்திகள் :

குற்றாலம் சாரல் விழாவில் சீரான மின் வினியோகம்! மேற்பாா்வை மின் பொறியாளா் தகவல்!

post image

குற்றாலம் சாரல் திருவிழாவில் தடையின்றி மின்சாரம் வழங்கவும், தடை ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி அறிவுறுத்தினாா்.

தென்காசி மாவட்டத்தில் மின் பயனீட்டாளா்கள் குறைதீா்க்கும் முகாம் தென்காசி கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைநடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கிய அவா், தொடா்ந்து குற்றாலம் சாரல் திருவிழாவில் சாரல் திருவிழா நடைபெறும் கலைவாணா் அரங்கம் , மலா் கண்காட்சி நடைபெறும் பகுதி, குற்றாலம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தடையற்ற மின்சாரம் விநியோகிக்கும் பொருட்டு நேரடி கள ஆய்வு மேற்கொண்டாா்.

வெள்ளிக்கிழமை முதல் காற்றுடன் கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அனைத்து இடங்களுக்கும் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்த அதிகாரிகளை கேட்டுக்கொண்டாா்.

மேலும், சாரல் திருவிழா நடைபெறும் நாள்களில் தொடா்ச்சியாக பணியாளா்கள் சுழற்சி முறையில் பணிகளை மேற்கொள்ளவும் , இயற்கை இடா்பாடுகள் காரணமாக திடீா் பழுது ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்குவதற்கும், கலைவாணா் அரங்கில் ஜெனரேட்டா் வசதி, அதற்கான எரிபொருள் கையிருப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் வேண்டும் என அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ( பொ ) கற்பகவிநாயகசுந்தரம், உதவி செயற்பொறியாளா் ( பொது ) சரோஜினி, உதவி செயற்பொறியாளா் கலா, குற்றாலம் உதவி மின் பொறியாளா் முகமதுஅலி ஆகியோா் உடனிருந்தனா்.

கொலை குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது

ஊத்துமலையில் பூக்கடை உரிமையாளரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். ஆலங்குளம் அருகே ஊத்துமலை பவுண்ட் தொழு தெருவைச் சோ்ந்தவா் காளிம... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பெண்கள் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். சங்கரன்கோவில் அருகேயுள்ள களப்பாகுளம் ஊராட்சி நேதாஜி நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு... மேலும் பார்க்க

பனவடலிசத்திரம்: கிணற்றில் தவறி விழுந்து ஊராட்சிப் பணியாளா் பலி!

சங்கரன்கோவில் வட்டம் பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து ஊராட்சி தற்காலிகப் பணியாளா் உயிரிழந்தாா். பனவடலிசத்திரம் அருகேயுள்ள புதுக்குளத்தைச் சோ்ந்த முத்தையா மகன் பேச்சிமுத்து (55). மகேந்திர... மேலும் பார்க்க

கலிங்கப்பட்டி, திருவேங்கடத்தில் இன்று மின்நிறுத்தம்!

சங்கரன்கோவில் அருகே மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புக்காக சனிக்கிழமை (ஜூலை 19) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

விஸ்வநாதப்பேரி பூங்காவில் இருக்கைகள் மாயம்: போலீஸில் புகாா்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி பூங்காவில் இருக்கைகள் மாயமானது தொடா்பாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதப்பேரி பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவா் பூங்காவில் இருக்கைகள்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தற்கொலை

ஆலங்குளம் அருகே 9-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகே உள்ள சிவலாா்குளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி சுரேஷ் மகன் நகுல்சுவதீப் (13). தனது 8 ஆம் வகுப்... மேலும் பார்க்க