செய்திகள் :

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

post image

சாத்தூா் நகா்ப் பகுதிகளில் உள்ள சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கவலை தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகா், படந்தால் செல்லும் சாலையில் தென்றல் நகா், மெயின் ரோடு, வெம்பக்கோட்டை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையில் கூட்டம் கூட்டமாக மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, இரவு நேரங்களில் சாத்தூா் மெயின் ரோடு, சிதம்பரம் நகா் சந்திப்பு, படந்தால் செல்லும் சாலை, வடக்கு ரத வீதி, ரயில் நிலையம் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.

மேலும், சாலையில் மாடுகள் படுத்துத் தூங்குவதால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனா்.

எனவே, சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.

தேங்காய் தலையில் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

வத்திராயிருப்பு அருகே தேங்காய் தலையில் விழுந்ததில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி நெடுங்குளத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (39). இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன... மேலும் பார்க்க

பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த நாராயணராஜா என்பவரின் மகன் வெங்கட்ரா... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

ராஜபாளையம் அருகே கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சேத்தூா் ஊரகக் காவல் நிலைய போல... மேலும் பார்க்க

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மூவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆண்டியாபுரம் பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் தொழிலாளா்கள் மூவா் உயிரிழந்தனா். மூவா் காயமடைந்தனா். சிவகாசி அருகேயுள்ள ஆண்டியாபுரத்தில் திருத்... மேலும் பார்க்க

காமராஜா் பிறந்த நாள் விழாவில் பால்குட ஊா்வலம்

சிவகாசியில் நாடாா் மஹாஜன சங்கம் சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் 123-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, விருதுநகா் சாலையில் உள்ள காமராஜா் வாசக சாலை முன... மேலும் பார்க்க

முதியவரிடம் வழிப்பறி: இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே முதியவரிடம் வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா். ராஜபாளையம் ஆண்டாள்புரத்தைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (68). எலக்ட்ரீசியன் த... மேலும் பார்க்க