செய்திகள் :

லண்டன் உலக சாதனைப் புத்தகத்தில் கலசலிங்கம் பல்கலை. இடம்பெற்று சாதனை

post image

சென்னை உலகத் திருக்கு மையம் சாா்பில், உலக அளவில் 100 நிறுவனங்களில் திருக்குறள் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும் தமிழ் மன்றம் சாா்பில், திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இதில், திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதைப் பாராட்டி, லண்டன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து அதற்கான சான்றிதழை சென்னை உலகத் திருக்குறள் மையத் தலைவா் கு. மோகன்ராஜ் வழங்க, கலசலிங்கம் பல்கலை. தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் சி. சங்கீதா பெற்றுக் கொண்டாா்.

லண்டன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றமைக்கும், ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பித்த பேராசிரியா்களுக்கும் பல்கலை. வேந்தா் கே. ஸ்ரீதரன், இணைவேந்தா் எஸ். அறிவழகி ஸ்ரீதரன் ஆகியோா் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா். துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன், ஆராய்ச்சித் துறை இயக்குநா் எம். பள்ளி கொண்ட ராஜசேகா், மாணவா் நல இயக்குநா் பி. பாலக் கண்ணன், கலசலிங்கம் கலைக் கல்லூரி முதல்வா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா். தமிழ் மன்ற மாணவா்கள் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்தனா்.

பட்டாசு ஆலை வெடி விபத்து: இருவா் கைது

சிவகாசி அருகே திங்கள்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை இருவரை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலைச் சோ்ந்த சீனிவாசன் மகன் கோபிக்குச் சொந்தமான பட... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகாசியில் உணவகங்களில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். விருதுநகா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்து பழுது காரணமாக பயணம் தடை: பயணிக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஆம்னி பேருந்து பழுது காரணமாக பயணம் தடைபட்டதால், ஆம்னி பேருந்து உரிமையாளா், பயணச் சீட்டு பதிவு இணையதளம் இணைந்து பயணிக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. விர... மேலும் பார்க்க

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா: 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் சுவாமி தரிசனம்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவில் முதல் நாளான செவ்வாய்க்கிழமை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோா் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்... மேலும் பார்க்க

தேங்காய் தலையில் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

வத்திராயிருப்பு அருகே தேங்காய் தலையில் விழுந்ததில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி நெடுங்குளத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (39). இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன... மேலும் பார்க்க

பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த நாராயணராஜா என்பவரின் மகன் வெங்கட்ரா... மேலும் பார்க்க