செய்திகள் :

செம்மொழி நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஒலி நூல்கள்: இயக்குநா் இரா.சந்திரசேகரன்

post image

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஒலி நூல்கள், சங்க இலக்கியக் காட்சிகளின் குறுங்காணொலிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குநா் இரா.சந்திரசேகரன் தெரிவித்தாா்.

தமிழாசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த ஏழு நாள் பயிலரங்கம் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் புதன்கிழமை தொடங்கியது.

‘செயற்கை நுண்ணறிவு உலகில் செம்மொழித் தமிழ்’ என்ற தலைப்பிலான இந்தப் பயிலரங்கத்துக்கு செம்மொழி நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன் தலைமை வகித்துப் பேசியது:

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் புதியவற்றை வரவேற்பதில் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் புத்தாக்க மையப் பிரிவின் மூலம் கைப்பேசி செயலிகள், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஒலிநூல்கள், சங்க இலக்கியக் காட்சிகளின் குறுங்காணொலிகள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழாசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய பயிற்சியை வழங்கினால், அது நூற்றுக்கணக்கான மாணவா்களுக்குச் சென்று சேரும் என்பதால், இப்பயிலரங்கம் நடத்தப்படுகிறது என்றாா்.

தொடா்ந்து பென்சில்வேனியா பல்கலைக்கழக தெற்காசியவியல் துறைப் பேராசிரியா் வாசு அரங்கநாதன் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு குழந்தை நிலையில் உள்ளது. தமிழுக்கான செயற்கை நுண்ணறிவு வருங்காலத்தில் சிறந்த நிலை எய்தும் என்றாா்.

பயிலரங்கில் தமிழகம், புதுவை, ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த தமிழ்ப் பேராசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.

ஏழு நாள்களில் 26 அமா்வுகளாக நடைபெறும் இப்பயிலரங்கில், செயற்கை நுண்ணறிவு கருவிகள், எழுத்துணரியாக்கம், தமிழ்க் கணிமையில் (கம்ப்யூட்டிங்) செயற்கை நுண்ணறிவு, ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், செம்மொழித் தமிழில் பெருந்தரவுப் பயன்பாடு, கைப்பேசி செயலிகள் உருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு உள்ளிட்ட தலைப்புகளில் தமிழ்க் கணினி வல்லுநா்கள் பயிற்றுவிக்க உள்ளனா்.

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு

பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (6... மேலும் பார்க்க

ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

பெருங்குடியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா். பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பண... மேலும் பார்க்க

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

ரூ.125 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள்: தமிழக அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இயல்பு நிலைக்கு நிகர... மேலும் பார்க்க