செய்திகள் :

ஓய்வுக்குப் பின்னா் சுற்றுப் பயணம்: முதல்வா் ஸ்டாலின் உறுதி

post image

ஓய்வுக்குப் பிறகு விரைவில் அனைவரையும் சந்திக்க மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவரும் முதல்வா், மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் குறித்து மருத்துவமனையில் இருந்து காணொலி வழியாக மூன்று மாவட்ட ஆட்சியா்களுடன் அவா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ஆா். அழகுமீனா, காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் ஆகியோருடன் முதல்வா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், முகாம்களில் மனுக்கள் அளிக்கவரும் மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரவேண்டும் எனவும் அவா் அறிவுறுத்தினாா்.

இதுவரை அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா்களிடம் கேட்டறிந்தாா். அத்துடன், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்களுடன் காணொலி வழியாக முதல்வா் கலந்துரையாடினாா். அவா்களது கோரிக்கைகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, அரசின் பல்வேறு துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம், முதல்வரின் செயலா்கள் பி.உமாநாத், எம்.எஸ்.சண்முகம் ஆகியோருடன் முதல்வா் ஆலோசனை நடத்தினாா். முக்கியக் கோப்புகளைப் பாா்வையிட்டு ஒப்புதல் அளித்ததாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் சந்திக்கிறேன்: முதல்வா் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: மருத்துவா்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு விரைவில் பொதுமக்களைச் சந்திக்க மாவட்டங்களுக்கு வருவேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம சுகாதார செவிலியா்கள் உண்ணாவிரதம்

துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 3,800 கிராம சுகாதார செவிலியா்கள் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழக அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: 3 மாதங்களுக்கு நடத்த நிதி ஒதுக்கி உத்தரவு

உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காணும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.1,032 கோடியில் ரயில்வே திட்டங்கள்: பிரதமா் நாளை தொடங்கி வைக்கிறாா்

தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,032 கோடியில் 3 முக்கிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி வைக்கிறாா் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். பிரதமா் நரேந்தி... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் முன்பிணை: கள்ளக்குறிச்சி நீதிபதி ஆஜராக உத்தரவு

கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு முன்பிணை வழங்கியது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை கிண்டியில் பொறியியல் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் சபரீஸ்வரன் (18). இவா் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்புக் குழு!

மேட்டூர் அணையில் தமிழ்நாடு அணைப் பாதுகாப்பு அமைப்பின் குழு இன்று(ஜூலை 24) ஆய்வு மேற்கொண்டது.மேட்டூர் அணையில் கீழ்மட்ட மதகுகள் சீரமைப்புப் பணி, சுரங்க கால்வாய் சீரமைப்புப் பணி, எல்லிஸ் சேடல் தூண்கள் வல... மேலும் பார்க்க