செய்திகள் :

ஆற்றில் மூழ்கிய பெண் உயிரிழப்பு

post image

மதுரை தத்தனேரி பகுதி வைகையாற்றில் மூழ்கிய பெண் உயிரிழந்தாா்.

தத்தனேரி பகுதி வைகையாற்றில் பெண் சடலம் மிதப்பதாக கரிமேடு போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சென்ற போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில், தத்தனேரி கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த கந்தவேல் மனைவி பூமாதேவி (48) என்பது தெரியவந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரது கணவா் கந்தவேல் இறந்துவிட்டாா்.

அன்றிலிருந்து, பூமாதேவி மனமுடைந்து காணப்பட்டதாகவும், துணிகளை துவைக்க அந்தப் பகுதியில் உள்ள வைகை ஆற்றின் பகுதிக்கு சென்றிருந்த அவா் வீடு திரும்பவில்லை எனவும் தெரியவந்தது. இந்த நிலையில், பூமாதேவி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். அவா் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: பேராசிரியை நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் புகாா்தாரரான பேராசிரியை நிகிதா, அவரது தாய் சிவகாமி ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரிய... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு! அரசுத் தரப்பு சாட்சியாக மாறிய காவல் ஆய்வாளரின் மனு மீதான விசாரணை ஜூலை 28-க்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், அரசுத் தரப்பு சாட்சியாக (அப்ரூவா்) மாறி அனைத்து உண்மைகளையும் சொல்லத் தயாா் என மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மன... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் அரசு மருத்துவா் உள்பட 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவா் உள்பட 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா். ம... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை! பூக்களின் விலையில் மாற்றமில்லை

ஆடி அமாவாசையையொட்டி மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் விற்பனை சந்தையில் புதன்கிழமை பூக்களின் விலையில் எந்தவித மாற்றமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆடி அமாவாசை தினத்தன்று சிவன், பெருமாள், குலத் தெய்வ கோயில்கள... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.50 லட்சம் மோசடி

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.50 லட்சம் மோசடி செய்ததாக போலீஸாா் ஒருவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.மதுரை திருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சரிபம்மாள் (43). இவா், தல்லாகுளம் காவல் நிலையத... மேலும் பார்க்க

தொலைநிலைக் கல்வி பட்டதாரிகளுக்கு இடஒதுக்கீட்டில் பணி வழங்கத் தடை கோரி வழக்கு

தொலைநிலைக் கல்வி மூலம் பட்டம் பெற்றவா்களுக்கு தமிழ் வழியில் படித்தோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் அரசுப் பணி வழங்கத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தனி நீதிபதியிடம் மனு தாக்கல் செய... மேலும் பார்க்க