செய்திகள் :

நெல்லை: `ஆதரவற்ற பாட்டியின் வீட்டை மீட்டுக்கொடுத்த காவல்துறை' - நன்றி கடிதத்தால் நெகிழ்ந்த போலீஸார்!

post image

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ரோஸ்மேரி. 70 வயதான இம்மூதாட்டி ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார். இவரது ஆதரவற்ற நிலையை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், ரொக்கமாகவும் காசோலை மூலமாகவும் பராமரிப்புச் செலவுக்காக பணம் கொடுத்ததாகக்கூறி அவர் வாழ்ந்து வரும் வீட்டை அபகரிக்க முயன்றுள்ளார். அத்துடன் வீட்டைக் காலி செய்யுமாறும் கூறியுள்ளார்.

நெல்லை மாநகர காவல் அலுவலகம்

இதனால், மனமுடைந்த ரோஸ்மேரி நெல்லை மாநகர காவல்துறை அலுவலகத்திற்குச் சென்று தனது நிலையை எடுத்துக் கூறினார். மூதாட்டியின் புகாரைக் கேட்டறிந்த போலீஸ் அதிகாரி ஒருவர், மூதாட்டியின் வீட்டை அபகரிக்க முயன்ற நபரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், அந்த சம்மந்தப்பட்ட நபர், மூதாட்டியின் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகையை வரவு வைத்துவிட்டு வீட்டு பத்திரத்தை அந்த நபர் தனது பெயரில் மாற்றி வைத்திருந்தது தெரிய வந்தது.  

மூதாட்டிக்கு காசோலை மூலம் பணம் அளிக்கப்பட்டதற்காக ஆதாரத்தைக் கேட்டதில் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். ரோஸ்மேரியின் வீட்டை மீண்டும் அவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க வேண்டும். இல்லவிட்டால் வீட்டின் மதிப்பிற்கு இணையான பணத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என கூறியதால், உடனடியாக சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று அந்த வீட்டை ரோஸ்மேரியின் பெயருக்கே மறுபடியும் பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்.

நெல்லை மாநகர காவல் அலுவலகம்

தனது வீடு தனக்கே மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் நெல்லை மாநகர காவல்துறைக்கு உருக்கமான கடிதம் ஒன்றை கண்ணீர் மல்க எழுதியுள்ளார். மூதாட்டியின் இந்த நன்றிக்கடிதம் நெல்லை மாநகர போலீஸார் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், காவல்துறையினர் மக்களின் குறைகளுக்கு உடனடியாக செவிசாய்த்து நடவடிக்கை எடுத்தால் எத்தகைய நீதியையும் நிலை நாட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது.    

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

வாடகை வீட்டை காலி செய்யாத வழக்கறிஞர்: 4 மாத சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்! - என்ன நடந்தது?

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. மோகன்தாஸ் (54). இவர் வசித்து வந்த வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததாக நீதிமன்றத்தில் வீட்டு உரிமையாளர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் இருதரப்பையும் விசாரித... மேலும் பார்க்க

போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் - நீதிமன்றம் விதித்த நிபந்தனை என்ன?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் வைத்திருந்ததாக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா இதே வழக்கில் கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

தேனி: லஞ்சம், முறைகேடான சொத்து... அரசு டாக்டருக்கு எதிராக மனு; பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தேனி அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் சொப்ன ஜோதி, தன் கணவருடன் சேர்ந்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன... மேலும் பார்க்க

பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடங்கி குஜராத் உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கறிஞரின் இந்த செயலை 'மூர்க்கத்தனம்' என ... மேலும் பார்க்க

JEE: தேர்வறையில் பல்லி, தொழில்நுட்ப கோளாறு; வழக்கு தொடர்ந்த மாணவர் - அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

தேர்வறையில் பல்லியைக் காண நேரிட்டதால் தேர்வில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை எனவும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தேர்வு எழுத இயலாமல் தவித்ததாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாணவரொருவர் வழக்கு தொ... மேலும் பார்க்க

Thug Life : `இந்த நிலைமை இப்படியே நீடித்தால்..!’ - கர்நாடக அரசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்

கன்னட மொழி பற்றி நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு எதிராக அவர் நடித்த தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ச... மேலும் பார்க்க