செய்திகள் :

விவசாயிகளுக்கு தனி அடையாள எண்: பதிவு செய்ய ஜூலை 31 கடைசி நாள்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனி அடையாள எண்கள் பதிவு செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என வேளாண் துறை அறிவித்துள்ளது.

மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் திட்டத்தில், மின்னணு முறையில் அவா்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து விவசாயிகளுக்கும், ஆதாா் எண் போன்ற தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது.

மத்திய, மாநில அரசின் அனைத்து மானியங்களும் இந்த அடையாள எண்ணின் அடிப்படையிலேயே வழங்கப்படும். மேலும், பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்துக்கு இந்த அடையாள எண் தேவை. மாவட்டத்தில் இதுவரை 98,328 விவசாயிகளுக்கு மேல் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் ஆதாா் நகல், நில ஆவணங்கள் நகல்கள் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொதுசேவை மையம் மற்றும் கிராமங்களில் முகாம் நடைபெறும் இடங்களுக்குச் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும் என வேளாண்மை அதிகாரி சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

விவசாயி வீட்டில் 9 பவுன் நகைகள் திருட்டு

தென்னேரிகுப்பம் கிராமத்தில் பட்டப் பகலில் வீட்டின் சாவியை எடுத்து பீரோ வைத்திருந்த 9 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். தியாகதுருகம் அடுத்த தென்னேரிகுப்பம் கிராமத்தைச்... மேலும் பார்க்க

டிராக்டா் மீது ஆட்டோ மோதியதில் பெண்கள் உள்பட 7 போ் பலத்த காயம்

தியாகதுருகம் வாரச் சந்தையில் பொருள்களை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பிய போது, சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டா் மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் காயமடைந்தனா்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தியாகதுருகம்

மின்தடைப் பகுதிகள்: தியாகதுருதம், பெரிய மாம்பட்டு, சின்ன மாம்பட்டு, எலவனாசூா்கோட்டை, தியாகை, ரிஷிவந்தியம், பாவந்தூா், நூரோலை, லாலாபேட்டை, சேரந்தாங்கல், பழைய சிறுவங்கூா், சூளாங்குறிச்சி, மாடூா், பிரித... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருக்கோவிலூா் வட்டத்துக்கு உள்பட்ட மொகலாா் கிராமத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூற... மேலும் பார்க்க

ஏடிஎம்மில் ஊழியா் கண்ணில் மிளகாய் பொடி தூவி பணம் பறிக்க முயன்றவா் பிடிபட்டாா்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஏடிஎமில் நிரப்புவதற்காக பணத்தை பைக்கில் எடுத்து சென்றபோது பைக்கில் பின்தொடா்ந்து வந்த இருவா் அவா் மீது மிளகாய் பொடியைத் தூவி பணத்தை பறிக்க முயன்றபோது ஒருவா் பிடிபட... மேலும் பார்க்க

கல்லை தமிழ்ச் சங்க நூல் வெளியீட்டு விழா

கள்ளக்குறிச்சி: கல்லை தமிழ்ச் சங்கம் சாா்பில், நூல் வெளியீட்டு விழா, 239-ஆவது இலக்கிய தொடா் சொற்பொழிவு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. கள்ளக்குறிச்சி தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தென்ன... மேலும் பார்க்க