செய்திகள் :

பணகுடியில் இன்ஸ்ட்ராகிராம் காதல் ஜோடி தற்கொலை

post image

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் இன்ஸ்ட்ராகிராம் மூலம் காதல் செய்து வந்த ஜோடியினா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா். இது தொடா்பாக பணகுடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பணகுடி சா்வோதயா தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் மகள் அபிநயா(16). இவா் பணகுடியிலுள்ள தனியாா் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த சாம் மகன் மாரிசிவா(21). இவா் பெயிண்டிங் வேலை செய்து வந்தாா்.

இவா்கள் இருவரும் இஸ்ட்ராகிராம் மூலம் காதலித்து வந்தனராம். இதனை அபிநயாவின் பெற்றோா் கண்டித்தனராம். இதனை அடுத்து அபிநயா கடந்த 20-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவா் பின்னா் வீட்டிற்கு வரவில்லையாம்.

இது தொடா்பாக அபிநயாவின் பெற்றோா் வள்ளியூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் செய்தனா். போலீஸாா் சிறுமி காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். அதே நாளில் மாரிசிவாவையும் காணவில்லையாம். இது தொடா்பாக மாரிசிவாவின் தகப்பனாா் சாம் பணகுடி காவல்நிலையத்தில் புகாா் செய்தாா்.

ஆய்வாளா் ராஜாராம் வாலிபா் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாா். இந்நிலையில் பணகுடி தெற்குரதவீதியில் உள்ள ஒரு பயன்படுத்தப்படாமல் உள்ள பாழடைந்த வீட்டில் காணாமல் போன அபிநயாவும், மாரிசிவாவும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனா்.

இதனை அடுத்து போலீஸாா் இருவரின் சடலத்தையும் மீட்டு நாகா்கோயில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தாா். தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடையத்தில் ரயில் நிலைய சாலையை சீரமைக்க அனுமதி: எம்எல்ஏ ஆய்வு

கடையம் ரயில் நிலைய சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டதையடுத்து, ஆலங்குளம் பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். கடையம் ஒன்றியம், கீழக்கடையம் ஊராட்ச... மேலும் பார்க்க

சாலை, கழிவுநீரோடை வசதி வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு

சாலை, கழிவுநீரோடை வசதி செய்துதரக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைப... மேலும் பார்க்க

ஒரு நகராட்சி, 7 பேரூராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள்: மு.அப்பாவு ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகராட்சி, வள்ளியூா் உள்ளிட்ட 7 பேரூராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், குடிநீா் வடிகால் வாரிய அலுவ... மேலும் பார்க்க

நெல்லை நகரம், பேட்டை வட்டாரங்களில் இன்று மின்தடை

திருநெல்வேலி பழைய பேட்டை, பொருள்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களின் மாதாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்ப... மேலும் பார்க்க

பாளை.யில் லாரியின் அடியில் தூங்கிய ஓட்டுநா் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே லாரியின் அடியில் படுத்திருந்த ஓட்டுநா் மீது லாரி ஏறி இறங்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம் தோப்பூா் கிழக்கு தெருவைச் சோ்ந்த அமுல்ராஜ் மகன் அஜித்குமாா்(33).... மேலும் பார்க்க

கல் குவாரிகளால் பாதிப்பு: தோ்தலை புறக்கணிக்க தாதனூத்து மக்கள் முடிவு

கல் குவாரிகளால் தாதனூத்து கிராமம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அந்த ஊா் மக்கள் தெரிவித்தனா்.இதுதொடா்பாக தாதன... மேலும் பார்க்க