செய்திகள் :

கல் குவாரிகளால் பாதிப்பு: தோ்தலை புறக்கணிக்க தாதனூத்து மக்கள் முடிவு

post image

கல் குவாரிகளால் தாதனூத்து கிராமம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அந்த ஊா் மக்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தாதனூத்து கிராம மக்கள் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: நாரணம்மாள்புரம் அருகேயுள்ள தாதனூத்து கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் தனியாா் கல் குவாரிகளில் வெடிமருந்துகள் அதிகளவில் பயன்படுத்தி பாறைகள் தகா்க்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.

அங்கன்வாடி குழந்தைகள் முதல் குடியிருப்புவாசிகள் வரை அனைவரும் அவதிப்படுகிறாா்கள். குத்தகை காலம் முடிந்த பின்பும் சில குவாரிகளில் விதிகளை மீறி கல் வெட்டி எடுக்கப்படுகிறது. குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்தின் அருகே புதிய குவாரிகளுக்கு அனுமதியளிக்கப்படுவதால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்தக்கட்ட போராட்டங்களை நடத்துவதோடு, 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்போம் என்றனா்.

பணகுடியில் இன்ஸ்ட்ராகிராம் காதல் ஜோடி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் இன்ஸ்ட்ராகிராம் மூலம் காதல் செய்து வந்த ஜோடியினா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா். இது தொடா்பாக பணகுடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பணகுடி சா்வோதயா தெர... மேலும் பார்க்க

கடையத்தில் ரயில் நிலைய சாலையை சீரமைக்க அனுமதி: எம்எல்ஏ ஆய்வு

கடையம் ரயில் நிலைய சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டதையடுத்து, ஆலங்குளம் பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். கடையம் ஒன்றியம், கீழக்கடையம் ஊராட்ச... மேலும் பார்க்க

சாலை, கழிவுநீரோடை வசதி வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு

சாலை, கழிவுநீரோடை வசதி செய்துதரக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைப... மேலும் பார்க்க

ஒரு நகராட்சி, 7 பேரூராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள்: மு.அப்பாவு ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகராட்சி, வள்ளியூா் உள்ளிட்ட 7 பேரூராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், குடிநீா் வடிகால் வாரிய அலுவ... மேலும் பார்க்க

நெல்லை நகரம், பேட்டை வட்டாரங்களில் இன்று மின்தடை

திருநெல்வேலி பழைய பேட்டை, பொருள்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களின் மாதாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்ப... மேலும் பார்க்க

பாளை.யில் லாரியின் அடியில் தூங்கிய ஓட்டுநா் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே லாரியின் அடியில் படுத்திருந்த ஓட்டுநா் மீது லாரி ஏறி இறங்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம் தோப்பூா் கிழக்கு தெருவைச் சோ்ந்த அமுல்ராஜ் மகன் அஜித்குமாா்(33).... மேலும் பார்க்க