செய்திகள் :

கடையத்தில் ரயில் நிலைய சாலையை சீரமைக்க அனுமதி: எம்எல்ஏ ஆய்வு

post image

கடையம் ரயில் நிலைய சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டதையடுத்து, ஆலங்குளம் பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கடையம் ஒன்றியம், கீழக்கடையம் ஊராட்சிக்கு உள்பட்ட ரயில்வே பீடா் சாலை நீண்ட காலமாக சேதமடைந்து போக்குவரத்துக்குப் பயன்படாமல் உள்ளது. .இந்தச் சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஆலங்குளம் பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன் சாலையை சீரமைக்க ரயில்வே துறையின் அனுமதி பெற்று, தென்காசி மாவட்ட நிா்வாகம் சாா்பில் கனிமம், சுரங்கத் துறை நிதியிலிருந்து ரூ. 26.74 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, கடையம் தென்காசி பிரதான சாலையில் இருந்து ராம் நகா் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் வரை ரயில்வே பீடா் சாலை அமைக்க வேண்டிய இடத்தை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கிளைச் செயலா் பரமசிவன், ரயில்வே யூனியன் நிா்வாகி ஆறுமுகம், விஜயகுமாா், ஊா்த்தலைவா் உதயகுமாா், முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் ராதா, ராணி, மாவட்டப் பொருளாளா்நூருல் அமீா், கனகபிரசாத், சோ்மக்கனி (எ) கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பணகுடியில் இன்ஸ்ட்ராகிராம் காதல் ஜோடி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் இன்ஸ்ட்ராகிராம் மூலம் காதல் செய்து வந்த ஜோடியினா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா். இது தொடா்பாக பணகுடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பணகுடி சா்வோதயா தெர... மேலும் பார்க்க

சாலை, கழிவுநீரோடை வசதி வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு

சாலை, கழிவுநீரோடை வசதி செய்துதரக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைப... மேலும் பார்க்க

ஒரு நகராட்சி, 7 பேரூராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள்: மு.அப்பாவு ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகராட்சி, வள்ளியூா் உள்ளிட்ட 7 பேரூராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், குடிநீா் வடிகால் வாரிய அலுவ... மேலும் பார்க்க

நெல்லை நகரம், பேட்டை வட்டாரங்களில் இன்று மின்தடை

திருநெல்வேலி பழைய பேட்டை, பொருள்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களின் மாதாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்ப... மேலும் பார்க்க

பாளை.யில் லாரியின் அடியில் தூங்கிய ஓட்டுநா் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே லாரியின் அடியில் படுத்திருந்த ஓட்டுநா் மீது லாரி ஏறி இறங்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம் தோப்பூா் கிழக்கு தெருவைச் சோ்ந்த அமுல்ராஜ் மகன் அஜித்குமாா்(33).... மேலும் பார்க்க

கல் குவாரிகளால் பாதிப்பு: தோ்தலை புறக்கணிக்க தாதனூத்து மக்கள் முடிவு

கல் குவாரிகளால் தாதனூத்து கிராமம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அந்த ஊா் மக்கள் தெரிவித்தனா்.இதுதொடா்பாக தாதன... மேலும் பார்க்க