செய்திகள் :

பாபநாசம் பட பாணியில் மகாராஷ்டிரத்தில் நடந்த கொலை! காட்டிக் கொடுத்த டைல்ஸ்!

post image

பாபாநாசம் படத்தில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, யாருக்கும் தெரியாமல் பூமிக்கு அடியில் புதைக்கப்படும் சம்பவத்தையே விஞ்சும் வகையில், மகாராஷ்டிரத்தில், தனது கணவரைக் கொன்று வீட்டுக்குள் குழிதோண்டி புதைத்திருக்கிறார் மனைவி.

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில், விஜய் சவான் (35) கடந்த 15 நாள்களாகக் காணாமல் போயிருக்கிறார். அவரது மனைவி கோமல் சவான் (28), கணவர் ஊருக்குச் சென்றிருப்பதாகக் கூறியிருக்கிறார். ஆனால், இதில் விஜய் குடும்பத்தாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

திங்கள்கிழமை காலை, விஜய் சகோதரர், கோமல் வீட்டில் இல்லாதபோது, வீட்டுக்குச் சென்று, பூட்டைத் திறந்து வீட்டை சோததித்துள்ளார். அப்போது வேறு எந்த ஒரு விஷயமும் சந்தேகத்தை ஏற்படுத்தாத நிலையில், தரையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் மூன்று டைல்ஸ்கள் மாற்றப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.

இது குறித்து அவருக்கு சந்தேகம் எழவே, உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த காவலர்கள், அவ்விடத்தில் பள்ளம் தோண்டி பார்த்தபோது, கருப்பு நிற பையில், விஜய் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.

அப்போதுதான், கடந்த இரண்டு நாள்களாக கோமல் மற்றும் பக்கத்து வீட்டில் வாழ்ந்து வந்த மோனு என்ற இருவரும் காணாமல் போயிருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

பிறகு, காவல்துறை நடத்திய விசாரணையில், கோமல், தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து கணவர் விஜயை கொலை செய்திருக்கலாம், மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இருவரும் சேர்ந்து வீட்டுக்குள்ளேயே பள்ளம் தோண்டி உடலை புதைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

விஜய்க்கு அண்மையில், காப்பீட்டுத் தொகை 6 லட்சம் வந்ததாகவும், அவரது வங்கியில் ஏற்கனவே ரூ.3 லட்சம் இருந்துள்ளதும், இந்தப் பணத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜூலை 29 -ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்! மோடி பங்கேற்பு

நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 ஆம் தேதி விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, 16 மணிநேரம் நடைபெறும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க... மேலும் பார்க்க

அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்

பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.ஏர் இந்தியா விமான விபத்தில் பலிய... மேலும் பார்க்க

ஆலப்புழாவில் அச்சுதானந்தன் உடல்! 150 கி.மீ. கடக்க 22 மணிநேரம்!

திருவனந்தபுரத்தில் நேற்று முற்பகல் புறப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம், 22 மணிநேரத்துக்கு பிறகு ஆலப்புழாவுக்கு வந்தடைந்தது.கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தல... மேலும் பார்க்க

விமான விபத்து: பிரிட்டன் வந்த இரு உடல்கள் மாறிவிட்டன! உறவினர்கள் புகார்!

ஏர் இந்தியா விபத்தில் பலியான பிரிட்டனைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினர் தங்களுக்கு கிடைத்த உடலுடன் டிஎன்ஏ பரிசோதனை பொருந்தவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்... மேலும் பார்க்க

தனிக் கவனம் பெறும் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர்! காரணம்?

உடல்பயிற்சிக் கூடங்களில் மழைக்குக் கூட ஒதுங்காமல், கிட்டத்தட்ட 26 கிலோ எடையைக் குறைத்து, பார்ப்பவர்களின் கண்களை விரியச் செய்கிறார் ஸ்ரீதேவியின் கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூர்.திரைத்துரை... மேலும் பார்க்க

எதிர்க்கட்சியினர் தொடர் அமளி! நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கிய... மேலும் பார்க்க