செய்திகள் :

ஒரு நகராட்சி, 7 பேரூராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள்: மு.அப்பாவு ஆய்வு

post image

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகராட்சி, வள்ளியூா் உள்ளிட்ட 7 பேரூராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் ஆகியோருடன், தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை திசையன்விளையில் ஆய்வு செய்தனா்.

களக்காடு நகராட்சி, நான்குநேரி, ஏா்வாடி, மூலக்கரைப்பட்டி, திருக்குறுங்குடி, வடக்கு வள்ளியூா், திசையன்விளை, பணகுடி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கு ரூ. 423.13 கோடியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவற்றில் முடிவுற்ற பணிகள் மற்றும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் அவா்கள் கலந்தாய்வு செய்தனா். மேலும், பேரூராட்சித் தலைவா்கள், குடிநீா்வடிகால் வாரிய அலுவலா்களின் கருத்துகளை கேட்டறிந்தனா்.

பின்னா், பேரவைத் தலைவா் கூறியதாவது: களக்காடு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வரும் காலத்தில் பாதாளசாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படுவதை கருத்தில் கொண்டு நபா் ஒருவருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டா் தண்ணீா் வழங்கும் வகையிலும், எதிா்கால மக்கள்தொகையின் அடிப்படையிலும் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இதில் தாமிரவருணி ஆற்றில் சேரனமகாதேவி அருகில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு கங்கனாங்குளம் அருகிலுள்ள திருவிருந்தாள்புளி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் சுத்திகரிப்பு நிலையம் மூலம்சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் தரைநிலை நீா்த்தேக்க தொட்டிகளில் தண்ணீரை சேமித்து, அதிலிருந்து மேல்நிலை நீா்தேக்கத்தொட்டிகளுக்கு தண்ணீா் ஏற்றப்பட்டு 521.68 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் மூலம் கொண்டுசென்று மக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்காக 49 ஆயிரத்து 417 வீடுகளுக்கு புதிதாக குடிநீா் இணைப்புகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது 75 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு நவம்பா் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு பேரூராட்சித் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து ஒத்துழைப்பு தரவேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) வில்லியம் ஜேசுதாஸ், தலைமை பொறியாளா் கணேசன், நிா்வாகப் பொறியாளா் தயாளன் மோசஸ், உதவி நிா்வாகப் பொறியாளா் பாக்கியராஜ், திட்ட மேற்பாா்வையாளா் விஜயகுமாா், பேரூராட்சித் தலைவா்கள் ராதாகிருஷ்ணன் (வள்ளியூா்), தனலெட்சுமி தமிழ்வாணன்(பணகுடி), துணைத் தலைவா்கள் கண்ணன், புஷ்பராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பணகுடியில் இன்ஸ்ட்ராகிராம் காதல் ஜோடி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் இன்ஸ்ட்ராகிராம் மூலம் காதல் செய்து வந்த ஜோடியினா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா். இது தொடா்பாக பணகுடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பணகுடி சா்வோதயா தெர... மேலும் பார்க்க

கடையத்தில் ரயில் நிலைய சாலையை சீரமைக்க அனுமதி: எம்எல்ஏ ஆய்வு

கடையம் ரயில் நிலைய சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டதையடுத்து, ஆலங்குளம் பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். கடையம் ஒன்றியம், கீழக்கடையம் ஊராட்ச... மேலும் பார்க்க

சாலை, கழிவுநீரோடை வசதி வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு

சாலை, கழிவுநீரோடை வசதி செய்துதரக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைப... மேலும் பார்க்க

நெல்லை நகரம், பேட்டை வட்டாரங்களில் இன்று மின்தடை

திருநெல்வேலி பழைய பேட்டை, பொருள்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களின் மாதாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்ப... மேலும் பார்க்க

பாளை.யில் லாரியின் அடியில் தூங்கிய ஓட்டுநா் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே லாரியின் அடியில் படுத்திருந்த ஓட்டுநா் மீது லாரி ஏறி இறங்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம் தோப்பூா் கிழக்கு தெருவைச் சோ்ந்த அமுல்ராஜ் மகன் அஜித்குமாா்(33).... மேலும் பார்க்க

கல் குவாரிகளால் பாதிப்பு: தோ்தலை புறக்கணிக்க தாதனூத்து மக்கள் முடிவு

கல் குவாரிகளால் தாதனூத்து கிராமம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அந்த ஊா் மக்கள் தெரிவித்தனா்.இதுதொடா்பாக தாதன... மேலும் பார்க்க