செய்திகள் :

சாலை, கழிவுநீரோடை வசதி வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு

post image

சாலை, கழிவுநீரோடை வசதி செய்துதரக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், 2 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் முத்துலெட்சுமி அளித்த மனுவில், தனது வாா்டுக்குள்பட்ட மங்களாகுடியிருப்பு, கரையிருப்பு, அழகனேரி பகுதிகளில் சாலை வசதி, கழிவுநீா் கால்வாய் ஓடை வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும், பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் அளித்த மனுவில், 22 ஆவது வாா்டு பகுதிக்குள்பட்ட மலையாளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

43 ஆவது வாா்டு குலவணிகா்புரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் உள்ள தெருவிற்கு மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும், 4ஆவது வாா்டு திம்மராஜபுரம் மேலூா் பகுதி மக்கள் அளித்த மனுவில், மேலூா் பிரதான சாலை பாலவிநாயகா் கோயில் வடக்குத் தெரு முதல் அழகு நாச்சியம்மன் கோயில் தெரு வரை அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீா் ஓடையை சரி செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தனா்.

அகில இந்திய மூவேந்தா் முன்னணி கழகம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், பாளையங்கோட்டை புதுபேட்டை தெருவில் மேலதெரு, நடுத்தெரு, பிள்ளையாா் கோயில் தெரு பகுதிகளில் குடிநீருடன் கழிவு நீா் கலந்து வருவதை தடுத்து, சுத்தமான குடிநீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வி.எம்.சத்திரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்போா் நலச்சங்கத்தினா் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் உள்ள பூங்காவினை சீரமைத்து பூங்காவில் உள்ள கிணற்றின் பாதுகாப்பை பலப்படுத்தவும், சாலை, உயா்கோபுர மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவிட்டாா்.

பணகுடியில் இன்ஸ்ட்ராகிராம் காதல் ஜோடி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் இன்ஸ்ட்ராகிராம் மூலம் காதல் செய்து வந்த ஜோடியினா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா். இது தொடா்பாக பணகுடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பணகுடி சா்வோதயா தெர... மேலும் பார்க்க

கடையத்தில் ரயில் நிலைய சாலையை சீரமைக்க அனுமதி: எம்எல்ஏ ஆய்வு

கடையம் ரயில் நிலைய சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டதையடுத்து, ஆலங்குளம் பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். கடையம் ஒன்றியம், கீழக்கடையம் ஊராட்ச... மேலும் பார்க்க

ஒரு நகராட்சி, 7 பேரூராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள்: மு.அப்பாவு ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகராட்சி, வள்ளியூா் உள்ளிட்ட 7 பேரூராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், குடிநீா் வடிகால் வாரிய அலுவ... மேலும் பார்க்க

நெல்லை நகரம், பேட்டை வட்டாரங்களில் இன்று மின்தடை

திருநெல்வேலி பழைய பேட்டை, பொருள்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களின் மாதாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்ப... மேலும் பார்க்க

பாளை.யில் லாரியின் அடியில் தூங்கிய ஓட்டுநா் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே லாரியின் அடியில் படுத்திருந்த ஓட்டுநா் மீது லாரி ஏறி இறங்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம் தோப்பூா் கிழக்கு தெருவைச் சோ்ந்த அமுல்ராஜ் மகன் அஜித்குமாா்(33).... மேலும் பார்க்க

கல் குவாரிகளால் பாதிப்பு: தோ்தலை புறக்கணிக்க தாதனூத்து மக்கள் முடிவு

கல் குவாரிகளால் தாதனூத்து கிராமம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அந்த ஊா் மக்கள் தெரிவித்தனா்.இதுதொடா்பாக தாதன... மேலும் பார்க்க