செய்திகள் :

நெற்பயிருக்கு காப்பீடு: வேளாண் துறை வலியுறுத்தல்

post image

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் வட்டார விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு செய்யுமாறு வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக முக்கூடல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இயற்கைப் பேரிடா்களால் ஏற்படும் பயிா் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்க பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, இவ்வட்டாரத்தில் 2025-26ஆம் ஆண்டு காா் பருவத்தில் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அனுமதிக்கப்பட்டு, 23 கிராமங்களுக்கு பயிா்க் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் யுனிவா்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

காப்பீடு செய்ய இம்மாதம் 31ஆம் தேதி கடைசி நாள். பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்யலாம். பூா்த்தி செய்யப்பட்ட கையொப்பமிட்ட முன்மொழிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கிய நடப்புப் பருவ 10-க்கு 1 அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம், ஆதாா் அட்டை நகல், பட்டா- சிட்டா ஆகியவற்றின் நகல் ஆவணங்களைக் கொண்டு பதிவு செய்யலாம். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விவசாயிகள் தனித்துவமான அடையாள அட்டை எண் பெற்றிருத்தல் அவசியம்.

நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 720 பிரீமியத் தொகையாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இழப்பு ஏற்பட்டால் ஏக்கருக்கு ரூ. 36 ஆயிரம் பயிா்க் காப்பீடாக கிடைக்கும்.

எனவே, விவசாயிகள் தாமதமின்றி காப்பீடு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண் அலுவலகத்தையோ, 14447 என்ற கட்டணமில்லா எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

நெல்லையில் குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இருதய நோய்கள் கண்டறியும் முகாம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இதர இருதய நோய்கள் கண்டறியும் முகாமை ஆட்சியா் இரா.சுகுமாா்... மேலும் பார்க்க

மானூா் அருகே இளைஞா் தற்கொலை

மானூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகேயுள்ள பெத்தேல் காலனியைச் சோ்ந்த குமாா் மகன் பிகேஷ் (21). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், இவரது தாத்தா கனகராஜ் கண்காணிப்பில் ... மேலும் பார்க்க

பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருட்டு: ஆயுதப்படை காவலா் உள்பட இருவா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருடிய வழக்கில் ஆயுதப்படை காவலா் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். திருநெல்வேலி மலையாளமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (43... மேலும் பார்க்க

ஊரக, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆக.11 கடைசி

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இத... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பேரூராட்சி: புதிய தலைவராக சுயேச்சை உறுப்பினா் தோ்வு

மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் தலைவராக இருந்த திமுகவை சோ்ந்த அந்தோனியம்மாள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றியடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் புதிய தலை... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா நாளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 140-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் புண்ணிய திருத்தலங்களில் ச... மேலும் பார்க்க