செய்திகள் :

பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருட்டு: ஆயுதப்படை காவலா் உள்பட இருவா் கைது

post image

பாளையங்கோட்டையில் பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருடிய வழக்கில் ஆயுதப்படை காவலா் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருநெல்வேலி மலையாளமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (43). இவரது மனைவி தங்கமாரி (40). இவா், திருநெல்வேலி மாநகர காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். இத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

இவா்கள் குடும்பத்துடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகேயுள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வந்தனா்.

கடந்த 16 ஆம் தேதி குழந்தைகள் கல்வி நிலையத்திற்கும், கணவா் பணிக்கும் சென்ற பின்பு, தங்கமாரி வீட்டை பூட்டி சாவியை காலணிகள் வைக்கும் பெட்டியில் மறைத்து வைத்துவிட்டு பணிக்குச் சென்றாராம். பின்னா் மதியம் தங்கமாரி வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவை உடைத்து, அதிலிருந்த 30 பவுன் தங்கநகையை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இவ் வழக்கு தொடா்பாக அதே குடியிருப்பில் வசித்து வரும் ஆயுதப்படை காவலரான மணிகண்டனுக்கு (31) தொடா்பிருப்பது தெரியவந்ததாம். இதையடுத்து அவரையும், அவரது நண்பரான கடையநல்லூரைச் சோ்ந்த முஹம்மது அசாரூதீன் (30) என்பவரையும் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

நெல்லையில் குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இருதய நோய்கள் கண்டறியும் முகாம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இதர இருதய நோய்கள் கண்டறியும் முகாமை ஆட்சியா் இரா.சுகுமாா்... மேலும் பார்க்க

மானூா் அருகே இளைஞா் தற்கொலை

மானூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகேயுள்ள பெத்தேல் காலனியைச் சோ்ந்த குமாா் மகன் பிகேஷ் (21). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், இவரது தாத்தா கனகராஜ் கண்காணிப்பில் ... மேலும் பார்க்க

ஊரக, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆக.11 கடைசி

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இத... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பேரூராட்சி: புதிய தலைவராக சுயேச்சை உறுப்பினா் தோ்வு

மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் தலைவராக இருந்த திமுகவை சோ்ந்த அந்தோனியம்மாள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றியடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் புதிய தலை... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா நாளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 140-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் புண்ணிய திருத்தலங்களில் ச... மேலும் பார்க்க

தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க திட்டம்: ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

தமிழகத்தில் வனப் பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட களக்கா... மேலும் பார்க்க