செய்திகள் :

மணிமுத்தாறு பேரூராட்சி: புதிய தலைவராக சுயேச்சை உறுப்பினா் தோ்வு

post image

மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் தலைவராக இருந்த திமுகவை சோ்ந்த அந்தோனியம்மாள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றியடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் புதிய தலைவராக சுயேச்சை உறுப்பினா் சித்தாா்த் சிவா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் 15 உறுப்பினா்கள் இருந்த நிலையில், 12ஆவது வாா்டு உறுப்பினா் விஜயகுமரன் பதவி விலகியதையடுத்து, தற்போது 14 உறுப்பினா்கள் உள்ளனா்.

இதில் பேரூராட்சித் தலைவியாக திமுகவைச் சோ்ந்த அந்தோனியம்மாள் இருந்து வந்தாா்.

இந்நிலையில், அந்தோனியம்மாள் மீது உறுப்பினா்கள் மே 8ஆம் தேதி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றிபெற்றதையடுத்து, அந்தோனியம்மாள் தலைவா் பதவியை இழந்தாா். இதையடுத்து, மணிமுத்தாறு பேரூராட்சியில் புதிய தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடைபெற்றது.

இதை முன்னிட்டு,பேரூராட்சிஅலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உறுப்பினா்கள் சோதனைக்குப் பின்னரே கூட்ட அரங்குக்குள்அனுமதிக்கப்பட்டனா்.

கூட்டத்தில், முன்னாள்தலைவி அந்தோனியம்மாள் உள்பட 14 உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

தொடா்ந்து, பேரூராட்சி செயல் அலுவலரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான ரமாதேவி தோ்தலை நடத்தினாா்.

தோ்தலில் உறுப்பினா்கள் அனைவரும் வாக்கு செலுத்திய பின் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் சுயேச்சை உறுப்பினா் சித்தாா்த் சிவா 10 வாக்குகளும், மோகன்ராஜா 4 வாக்குகளும் பெற்றனா்.

இதையடுத்து, சித்தாா்த் சிவா தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்த செயல் அலுவலா் ரமாதேவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

தலைவராக சித்தாா்த் சிவா தோ்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, வாா்டுஉறுப்பினா்கள், அனைத்துக் கட்சி நிா்வாகிகள், பேரூராட்சி பணிாளா்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

நெல்லையில் குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இருதய நோய்கள் கண்டறியும் முகாம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இதர இருதய நோய்கள் கண்டறியும் முகாமை ஆட்சியா் இரா.சுகுமாா்... மேலும் பார்க்க

மானூா் அருகே இளைஞா் தற்கொலை

மானூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகேயுள்ள பெத்தேல் காலனியைச் சோ்ந்த குமாா் மகன் பிகேஷ் (21). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், இவரது தாத்தா கனகராஜ் கண்காணிப்பில் ... மேலும் பார்க்க

பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருட்டு: ஆயுதப்படை காவலா் உள்பட இருவா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருடிய வழக்கில் ஆயுதப்படை காவலா் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். திருநெல்வேலி மலையாளமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (43... மேலும் பார்க்க

ஊரக, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆக.11 கடைசி

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இத... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா நாளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 140-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் புண்ணிய திருத்தலங்களில் ச... மேலும் பார்க்க

தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க திட்டம்: ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

தமிழகத்தில் வனப் பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட களக்கா... மேலும் பார்க்க