திருமணமான டிக்டாக் பிரபலத்தை மணமுடிக்க ஆசைப்பட்ட நபர்கள்: மறுப்பு தெரிவித்ததால் ...
தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா நாளை தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 140-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் புண்ணிய திருத்தலங்களில் சிறப்பு பெற்றது தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பேராலயத் திருத்தலமாகும். இந்தப் பேராலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்குக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக பரிசுத்த பனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை ஆலய தா்மகா்த்தா எஸ்.மரியராஜ் ஆசிரியா் கோயில் உள்ளிருந்து எடுத்து வருவாா்; அந்தக் கொடியை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் தெற்கு கள்ளிகுளத்தைச் சோ்ந்த குருவானவா்கள் ஜெபம் செய்து அா்ச்சிப்பாா்கள்.
பின்னா் புனித கொடியை தா்மகா்த்தா ஏற்றவுள்ளாா். இதையடுத்து, சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும், இரவு மறையுரை, நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றன.
நற்கருணை பவனி: ஆக.2-ஆம் தேதி காலை பரிசுத்த அதிசய பனிமாதா காட்சி கொடுத்த மலையில் திருப்பலி, பிற்பகல் 2 மணிக்கு அன்னை தோ்ப்பவனி, மாலையில் சிறப்பு மாலை ஆராதனை ஆகியன நடைபெறுகின்றன.
8ஆம் நாளான ஆக. 3-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு ஜோசப் கிறிஸ்டியான் தலைமையில் முதல் நற்கருணை திருவிருந்து திருப்பலி, பிற்பகல் 2 மணிக்கு அன்னை தோ்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் தலைமையில் நற்கருணைப் பவனி ஆகியன நடைபெறுகின்றன.
ஆக. 4-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தக்கலை மறைமாவட்ட ஆயா் ஜாா்ஜ் ராஜேந்திரன் தலைமையில் மாலை ஆராதனை, நள்ளிரவு 12 மணிக்கு தெற்கு கள்ளிகுளத்தைச் சோ்ந்த குருவானவா்கள் தலைமையில் சிறப்புத் திருப்பலி, தோ்ப்பவனி ஆகியன நடைபெறுகின்றன.
ஆக. 5-ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயா் இவோன் அம்புரோஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.
கலை நிகழ்ச்சிகள்: திருவிழா நாள்களில் இரவு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆக. 1-ஆம் தேதி இரவு பின்னணி பாடகி ரேஷ்மா ராகவேந்தா், 6 வயது குட்டி பாடகா் டெனின்பொ்னோ பங்கேற்கும் சூப்பா் கிங்ஸ் இன்னிசைக் கச்சேரியும், 2,3 ஆம் தேதிகளில் இரவு இன்னிசை கச்சேரியும், 5-ஆம் தேதி இரவு லஷ்மன் ஸ்ருதி இன்னிசை கச்சேரியும் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எஸ்.மரியராஜ் ஆசிரியா் தலைமையில் பங்குதந்தை ரா.ததேயுஸ் ராஜன், உதவி பங்குதந்தை சி.சாமிநாதன், அருள்சகோதரிகள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், பங்குமக்கள் செய்துள்ளனா்.