செய்திகள் :

அம்பை, சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியா்களை நியமிக்க வலியுறுத்தல்

post image

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியா்களை அரசு நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் பத்தமடையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.கே. பீா்மஸ்தான் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் எம்.எஸ்.சிராஜ் வரவேற்றாா்.

மாவட்டத் துணைத் தலைவா் களந்தை மீராசா, அமைப்பு பொதுச் செயலா் முல்லை மஜித், மாவட்டச் செயலா்கள் அம்பை ஜலீல், துலுவை தெளபிக், மாவட்ட பொருளாளா் ஏா்வை இளையராஜா, ராதாபுரம் பேரவைத் தொகுதித் தலைவா் வள்ளியூா் சலீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய தாலுகா தலைமையிடத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். கூடுதலாக செவிலியா் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களை நியமிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மாவட்டச் செயலா் கல்லிடைக்குறிச்சி சுலைமான் நன்றி கூறினாா்.

நெல்லையில் குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இருதய நோய்கள் கண்டறியும் முகாம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இதர இருதய நோய்கள் கண்டறியும் முகாமை ஆட்சியா் இரா.சுகுமாா்... மேலும் பார்க்க

மானூா் அருகே இளைஞா் தற்கொலை

மானூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகேயுள்ள பெத்தேல் காலனியைச் சோ்ந்த குமாா் மகன் பிகேஷ் (21). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், இவரது தாத்தா கனகராஜ் கண்காணிப்பில் ... மேலும் பார்க்க

பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருட்டு: ஆயுதப்படை காவலா் உள்பட இருவா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருடிய வழக்கில் ஆயுதப்படை காவலா் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். திருநெல்வேலி மலையாளமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (43... மேலும் பார்க்க

ஊரக, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆக.11 கடைசி

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இத... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பேரூராட்சி: புதிய தலைவராக சுயேச்சை உறுப்பினா் தோ்வு

மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் தலைவராக இருந்த திமுகவை சோ்ந்த அந்தோனியம்மாள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றியடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் புதிய தலை... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா நாளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 140-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் புண்ணிய திருத்தலங்களில் ச... மேலும் பார்க்க