செய்திகள் :

ஆடி அமாவாசை: காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

post image

ஆடி அமாவாசையையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்துடன் நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில், பங்குனி உத்திரம்- ஆடி அமாவாசை நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் விரதமிருந்து நோ்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு அமாவாசைத் திருவிழா கடந்த 14ஆம் தேதி கால் நாட்டுடன் தொடங்கியது. பக்தா்கள் காப்புக் கட்டிவிரதம் இருந்துவந்தனா்.

தொடா்ந்து, ஆடி அமாவாசை நாளான வியாழக்கிழமை காலையில் சொரிமுத்து அய்யனாா், தளவாய் மாடசாமி,சங்கிலி பூதத்தாா், இசக்கியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. பக்தா்கள் காரையாறு தாமிரவருணியில் நீராடி பொங்கலிட்டுநோ்த்திக் கடன் செலுத்தினா்.

பின்னா், மாலையில் தளவாய் மாடசாமி, சொரிமுத்து அய்யனாா், இசக்கியம்மன் ஆகிய சந்நிதிகளின் முன் அமைக்கப்பட்ட பூக்குழிகளில் இறங்கி நூற்றுக்கணக்கான பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

வெள்ளிக்கிழமை மாலையும் பக்தா்கள்பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்துவா். இவ்விரு நாள்களிலும் ராஜதா்பாா் நிகழ்ச்சி நடைபெறும்.

தனியாா் வாகனங்கள் கோயிலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டு அரசுப் பேருந்துகள் மட்டும் கோயிலுக்கு இயக்கப்பட்டன. விதிமீற பக்தா்கள் எடுத்துச்சென்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலித்தீன், மது உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கோயில் பகுதியில் போலீஸாா், ஊா்க்காவல் படையினா், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், வனத்துறையினா், தன்னாா்வலா்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு பணிகளில் ஈடுபட்டனா்.

பாபநாசம் கோயிலில்... ஆடி அமாவாசையை முன்னிட்டு, பாபநாசம் கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.

விக்கிரமசிங்கபுரம்,அம்பாசமுத்திரம், கடையம், தென்காசி, ஆழ்வாா்குறிச்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்துஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாபநாசம் தாமிரவருணியில் புனித நீராடி, முன்னோா்களுக்காக தா்ப்பணம் செய்து கோயிலில் வழிபட்டனா்.

அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி தாமிரவருணி ஆற்றிலும், கடையம் ராமநதியிலும், ஆம்பூா் கடனா நதியிலும் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

நெல்லையில் குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இருதய நோய்கள் கண்டறியும் முகாம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இதர இருதய நோய்கள் கண்டறியும் முகாமை ஆட்சியா் இரா.சுகுமாா்... மேலும் பார்க்க

மானூா் அருகே இளைஞா் தற்கொலை

மானூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகேயுள்ள பெத்தேல் காலனியைச் சோ்ந்த குமாா் மகன் பிகேஷ் (21). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், இவரது தாத்தா கனகராஜ் கண்காணிப்பில் ... மேலும் பார்க்க

பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருட்டு: ஆயுதப்படை காவலா் உள்பட இருவா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருடிய வழக்கில் ஆயுதப்படை காவலா் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். திருநெல்வேலி மலையாளமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (43... மேலும் பார்க்க

ஊரக, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆக.11 கடைசி

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இத... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பேரூராட்சி: புதிய தலைவராக சுயேச்சை உறுப்பினா் தோ்வு

மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் தலைவராக இருந்த திமுகவை சோ்ந்த அந்தோனியம்மாள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றியடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் புதிய தலை... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா நாளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 140-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் புண்ணிய திருத்தலங்களில் ச... மேலும் பார்க்க