செய்திகள் :

பகுஜன் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு எதிராக பாஜக சதி: ராகுல் கண்டனம்!

post image

பகுஜன் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு எதிராக பாஜக சதி செய்து வருவதாக ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான காலியாக உள்ள இடஒதுக்கீடு பதவிகள் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மோடி அரசை தாக்கிப் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக அவருடைய எக்ஸ் பதிவில்,

நாடாளுமன்றத்தில் மோடி அரசு முன்வைத்த புள்ளி விரவங்கள் பகுஜன்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதற்கும், நிறுவன ரீதியான மனுவாதம் இருப்பதற்கும் உறுதியான சான்றாகும்.

மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்டி-களுக்கான பேராசிரியர் பதவிகளில் 83 சதவீதமும், ஓபிசிகளுக்கான 80 சதவீதமும், எஸ்சிகளுக்கான 64 சதவீதமும் வேண்டுமென்றே காலியாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதே நேரத்தில், எஸ்டி-களுக்கான உதவிப் பேராசிரியர் பதவிகளில் 65 சதவீதமும், ஓபிசி-களுக்கான 69 சதவீதமும், எஸ்சி-களுக்கான 51 சதவீதமும் காலியாக விடப்பட்டுள்ளன.

இது வெறும் அலட்சியம் மட்டுமல்ல.. பகுஜன் சமூகத்தை ஆராய்ச்சி மற்றும் கொள்கைகளிலிருந்து விலக்கி வைப்பதற்கான திட்டமிடப்பட்ட சதியாகும். பல்கலைக்கழகங்களில் 'பகுஜன்களின்' போதுமான பங்கேற்பு இல்லாததால், தாழ்த்தப்பட்ட சமூகங்களின் பிரச்னைகள் ஆராய்ச்சி மற்றும் விவாதங்களிலிருந்து வேண்டுமென்றே மறைந்துபோகும்படி செய்யப்படுகின்றது.

ஆயிரக்கணக்கான தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி வேட்பாளர்கள் மனுவாத சிந்தனையின் கீழ் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். மேலும் அரசு எந்தவித பொறுப்பையும் ஏற்கத் தயாராக இல்லை. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

காலியாக உள்ள அனைத்து பதவிகளும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். மனுவாதம் புறக்கணிப்பு அல்ல, பகுஜன்களுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Congress leader Rahul Gandhi on Friday attacked the Modi government over vacant reserved posts for SCs, STs and OBCs in central universities and said this is not just negligence but a "well-planned conspiracy" to keep 'Bahujans' out of education, research and policies.

கேரள பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றவாளி தப்பியது எப்படி? அதிர்ச்சியில் சிறைத்துறை

கேரள மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஓடும் ரயிலிலிருந்து பெண்ணை வெளியே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, கன்னூர் சிறையிலிருந்து தப்பிச் சென்றது எப்படி என்று தெரிய... மேலும் பார்க்க

நீதிபதி வா்மா பதவிநீக்க தீா்மானம் மக்களவையில் கொண்டு வரப்படும்: அமைச்சா் கிரண் ரிஜிஜு தகவல்

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி வா்மாவை பதவி நீக்கம் செய்யும் தீா்மானம் மக்களவையில் அனுமதிக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் பதவி: தோ்தல் அதிகாரிகள் நியமனம்

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவா் தோ்தலை நடத்தும் தோ்தல் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலா் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளாா். மத்திய சட்டம் மற்றும் நிதித் துறை அமைச்சகம் மற்றும் மாநிலங்களவை துணைத... மேலும் பார்க்க

யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்துகள் முடக்கம்

யூகோ வங்கி முன்னாள் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் (சிஎம்டி) சுபோத் குமாா், அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. மேற்கு வங்கி மாநிலம் க... மேலும் பார்க்க

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க