Pawan Kalyan: "சினிமாவில் நடிப்பதை நிறுத்தப் போகிறேன்; ஆனால்..." - பவன் கல்யாண் ...
இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னையில் மிதமான மழை!
நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்டங்களில் இன்று(புதன்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அடுத்த 4 நாள்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இன்றும் நாளையும்(ஜூலை 23, 24) நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 25, 26 தேதிகளில் நீலகிரி, தேனி, தென்காசி, கோவை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை இன்றும் நாளையும்(ஜூலை 23, 24) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிக்பட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
23-07-2025 முதல் 27-07-2025 வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல அரபிக்கடல், வங்கக்கடல், மாலத்தீவு பகுதிகளிலும் வருகிற ஜூலை 27 வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.