செய்திகள் :

Ooty: தேயிலைத் தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த பெண் சிறுத்தை; நீலகிரியில் தொடரும் சோகம்!

post image

சிறுத்தைகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது மேலும் ஒரு பெண் சிறுத்தை குட்டி ஒன்று மர்மமான முறையில் தனியார் தேயிலைத் தோட்டத்தில் இறந்து கிடந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள ராக்வுட் தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடைப்பதாக கூடலூர் வனக்கோட்ட வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்திருக்கிறது.

நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர், சிறுத்தையின் இறப்பை உறுதி செய்துள்ளனர். உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

இறந்து கிடந்த சிறுத்தை குட்டி

கால்நடை மருத்துவர்களுடன் சென்ற வனத்துறை குழுவினர், சிறுத்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வு மேற்கொண்டுள்ளனர்.

உடல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். இதே தேயிலைத் தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு பெண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

இறந்தது சுமார் ஒரு வயதான பெண் சிறுத்தை என்றும், உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

காடுகளை இழந்து தவிக்கும் வனவிலங்குகள் தேயிலைத் தோட்டங்களில் தஞ்சமடைந்து வரும் நிலையில், தனியார் தேயிலைத் தோட்டங்களில் மர்மமான முறையில் சிறுத்தைகள் தொடர்ந்து இறந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`வெஸ்ட் அண்டார்டிகா' பெயரில் டெல்லி அருகே போலி தூதரகம்.. விசாரணையில் அதிர்ச்சி; பின்னணி என்ன?

ஹர்ஸ்வர்தன் ஜெயின்உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் நகரில் போலி வெளிநாட்டு தூதரகம் ஒன்று செயல்படுவதாக மாநில சிறப்பு போலீஸ் படைக்கு தகவல் கிடைத்தது. அத்தூதரகத்தை சேர்ந்த ஹர்ஸ்வர்தன் ஜெயின் என்பவர் தூதரக... மேலும் பார்க்க

Cyber Crime: ஒரே ஆண்டில் ரூ.22,845 கோடி இழப்பு; 206% அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்

இந்தியாவில் கடந்த 2024-ம் ஆண்டில் மட்டுமே 22,845.73 கோடி ரூபாய் சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இந்த முந... மேலும் பார்க்க

வேலூர்: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; கணவன் வெட்டிக்கொலை; இளைஞனுடன் சிக்கிய மனைவி - நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலுள்ள குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மகன் பாரத் (36). கேட்டரிங் படித்துள்ள பாரத் தாம்பரம் பகுதியிலிருக்கும் ஒரு தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்ட... மேலும் பார்க்க

சைபர் கிரைமில் ரூ.2 கோடி பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர்; கோவா, காஷ்மீரில் காதலியுடன் உல்லாச பயணம்..

நாடு முழுவதும் சைபர் கிரிமினல்கள் பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துவிடுவோம் என்று கூறி மிரட்டி அடிக்கடி பணத்தை பறித்து வருகின்றனர். இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் இக்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் வழக்கில் ட்விஸ்ட்: ’நடந்தத நான் சொல்றேன்’ – அப்ரூவராக மாறும் மாஜி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்

சாத்தான்குளத்தில் காவல்துறை சித்திரவதையால் தந்தை-மகன் மரணமடைந்த வழக்கில் அப்ரூவராக மாற உள்ளதாக சிறையில உள்ள முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கைதா... மேலும் பார்க்க

புதுச்சேரி: `என் அக்கா குளிக்கறதை எட்டிப் பாக்குறியா ?’ - இளைஞரை கொலை செய்த பெண்ணின் சகோதரர்

புதுச்சேரி, பாகூர் அடுத்த பனையடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுரு. சில நாள்களுக்கு முன் தன்னுடைய எதிர்வீட்டில் இருக்கும் பெண் குளிக்கும்போது, மாடியில் இருந்து இவர் எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது.... மேலும் பார்க்க