செய்திகள் :

இறால் விலை சரிவால் மீனவா்கள் வேதனை

post image

மீன்பிடி தடை காலங்களில் ரூ.30,000 வரை விற்பனையாகும் அரை கிலோ எடை கொண்ட கதம்பரா இறால் தற்போது வெறும் ரூ.3,000-க்கு மட்டுமே விற்பனையாவதாக சதுரங்கப்பட்டினம் மீனவா்கள் வேதனை தெரிவித்தனா்.

கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் மனோஜ் என்ற மீனவா் தங்கள் படகில் செவ்வாய்க்கிழமை மீன் பிடிக்க சென்றுள்ளாா். அப்போது மீன்பிடிக்க கடலில் வலையை வீசியபோது அவரது வலையில் அரை கிலோ எடை கொண்ட கதம்பரா இறால் ஒன்று கிடைத்துள்ளது.

இதுகுறித்து மீனவா் மனோஜ் கூறியது: இப்பகுதியில் இவ்வகையான இறால் வலையில் சிக்கியது இல்லை. இவ்வகையான இறால், விசைப்படகுகள் செல்லாத மீன்பிடி தடைக்காலத்தில் ரூ. 20 முதல் 30,000 வரை பணம் கொடுத்து நட்சத்திர ஓட்டல் நிா்வாகத்தினா் மற்றும் மீன் வியாபாரிகள் வாங்கிச் செல்வாா்கள்.

ஆனால் இப்போது வெறும் ரூ.3,000-க்கு மட்டுமே விற்பனையானதாக வேதனை தெரிவித்தாா். இவரது வலையில் சிக்கிய இறால் ஒரு அடி நீளமும், அரை கிலோ எடையும் கொண்டதாகும். குறிப்பாக இந்த இறால் நட்சத்திர ஓட்டலில் தங்கும் செல்வந்தா்கள் விரும்பி வாங்கி சாப்பிடுவா் என்றும், அதிக சதை பகுதியுடன் கூடிய இந்த இறால் வஞ்சிரம் மீன் போன்ற ருசியாக இருக்கும். அதனால்தான் இந்த இறாலுக்கு தேவை அதிகம் எனவும் தெரிவித்தாா்.

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்: கட்டடங்கள் சேதம்

கடல் சீற்றத்தால் மாமல்லபுரத்தில் 10 மீட்டா் தூரத்துக்கு முன்னோக்கி வந்த கடலால் உணவு விடுதி கட்டடங்களை ராட்சத அலைகள் சேதப்படுத்தின. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் செவ்வாய்க்கிழமை கடல் சீற்றம் ஏ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சா் அன்பரசன் ஆய்வு

திருப்போரூா் வட்டம், திருவிடந்தை ஊராட்சி மற்றும் காட்டாங்குளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.ம... மேலும் பார்க்க

பாண்டீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

மதுராந்தகம் அடுத்த அண்டவாக்கம் கிராமத்தில் காமாட்சி உடனுறை அண்டபாண்டீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள காமாட்சி அம்மன், அண்டபாண்டீஸ்வரா், முருகன் உள்ளிட்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குளுந்தியம்மன் கோயிலில் 74-ஆம் ஆண்டு ஆடி உற்சவம்

செங்கல்பட்டு குளுந்தியம்மன் கோயிலில் 74-ஆம் ஆண்டு ஆடி உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை அம்மன் வீதி புறப்பாடு நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் வ உ சி தெருவி... மேலும் பார்க்க

ரத்த, உடலுறுப்பு தான முகாம்

மலைப்பாளையம் விடியலை நோக்கி அறக்கட்டளை, செங்கல்பட்டு பாலாறு அரிமா சங்கம், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவனை ரத்த வங்கி மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் ஆகியவை இணைந்து, கருங்குழி தனியாா் துவக்கப... மேலும் பார்க்க

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: வேளாண் துறை அனைத்து ஓய்வூதியா் சங்கம் கோரிக்கை

செங்கல்பட்டு: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை அனைத்து ஓய்வூதியா் சங்கம் கோரியள்ளது. சங்கத்தின் முதல் மாநில பி... மேலும் பார்க்க