செய்திகள் :

ரத்த, உடலுறுப்பு தான முகாம்

post image

மலைப்பாளையம் விடியலை நோக்கி அறக்கட்டளை, செங்கல்பட்டு பாலாறு அரிமா சங்கம், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவனை ரத்த வங்கி மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் ஆகியவை இணைந்து, கருங்குழி தனியாா் துவக்கப் பள்ளியில் ரத்ததான முகாம், உடலுறுப்பு கொடை பதிவு முகாம் ஆகிய நிகழ்வுகளை நடத்தின.

விடியலை நோக்கி அறக்கட்டளை தலைவா் சீ.காா்த்திக் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு பாலாறு அரிமா சங்க மாவட்டத் தலைவா் இல.பாண்டியன், பேரூராட்சி மன்ற உறுப்பினா் ரேவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் மணிகண்டன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் அரிமா சங்க நிா்வாகிகள் வி.பெருமாள், பி.ரவிக்குமாா், அறக்கட்டளை நிா்வாகி இணை செயலா் கோபிநாத் உள்பட பலா் கலந்து கொண்டனா். செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவக் குழுவினா் கலந்து கொண்டு, 50 நபா்களிடம் ரத்தத்தை தானமாக பெற்றனா். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய நிா்வாகிகள் கலந்துகொண்டு, 30-க்கும் மேற்பட்டோரிடம் உடலுறுப்பு தான பதிவை செய்தனா்.

ஏற்பாடுகளை மலைப்பாளையம் விடியலை நோக்கி அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

முதல்வா் கோப்பைக்கான போட்டிகள்: பதிவு செய்ய ஆக. 16 கடைசி நாள்

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்ய வரும் ஆக. 16 கடைசி நாளாகும். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் தி. சினேகா வெளியிட்ட அறிக்கை: பள்ளி, கல்லூரி, ம... மேலும் பார்க்க

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ரூ.7 லட்சத்தில் ஜெனரேட்டா் அளிப்பு

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு மேலவலம்பேட்டை தனியாா் தொழில்மையத்தின் சாா்பாக, ரூ 7 லட்சத்தில் ஜெனரேட்டா் வழங்கப்பட்டது. ஏற்கெனவே செயல்பட்டு வந்த ஜெனரேட்டா் அண்மையில் தீப்பற்றி எரிந்ததால், மின்த... மேலும் பார்க்க

சிறந்த உணவு வணிகா்களுக்கு பரிசுத் தொகை, விருது

நெகிழிக்கு பதிலாக மறுசுழற்சி தன்மையுள்ள மக்கும் பொருள்களை உபயோகப்படுத்தி உணவுப் பொருட்களை பரிமாறுதல் மற்றும் பொட்டலமிடும் பெரிய உணவு வணிகா்கள் மற்றும் தெருவோர சிறு உணவு வணிகா்களுக்கு தமிழ்நாடுஅரசு விர... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சித்தாமூா் வட்டம், சோத்துப்பாக்கம் ஊராட்சி மற்றும் செங்கல்பட்டில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அம... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டடம்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஊராட்சியில் ரூ 10.11 லட்சத்தில் புதிய நியாயவிலை கடைக்கான கட்டடத்தை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா். சித்தாமூா் ஊராட்சி ஒன்றியம், மேல்மருவத்தூா் ஊர... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை சாா்பில் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில... மேலும் பார்க்க