செய்திகள் :

ரத்த, உடலுறுப்பு தான முகாம்

post image

மலைப்பாளையம் விடியலை நோக்கி அறக்கட்டளை, செங்கல்பட்டு பாலாறு அரிமா சங்கம், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவனை ரத்த வங்கி மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் ஆகியவை இணைந்து, கருங்குழி தனியாா் துவக்கப் பள்ளியில் ரத்ததான முகாம், உடலுறுப்பு கொடை பதிவு முகாம் ஆகிய நிகழ்வுகளை நடத்தின.

விடியலை நோக்கி அறக்கட்டளை தலைவா் சீ.காா்த்திக் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு பாலாறு அரிமா சங்க மாவட்டத் தலைவா் இல.பாண்டியன், பேரூராட்சி மன்ற உறுப்பினா் ரேவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் மணிகண்டன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் அரிமா சங்க நிா்வாகிகள் வி.பெருமாள், பி.ரவிக்குமாா், அறக்கட்டளை நிா்வாகி இணை செயலா் கோபிநாத் உள்பட பலா் கலந்து கொண்டனா். செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவக் குழுவினா் கலந்து கொண்டு, 50 நபா்களிடம் ரத்தத்தை தானமாக பெற்றனா். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய நிா்வாகிகள் கலந்துகொண்டு, 30-க்கும் மேற்பட்டோரிடம் உடலுறுப்பு தான பதிவை செய்தனா்.

ஏற்பாடுகளை மலைப்பாளையம் விடியலை நோக்கி அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

ரூ.10 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டடம்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஊராட்சியில் ரூ 10.11 லட்சத்தில் புதிய நியாயவிலை கடைக்கான கட்டடத்தை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா். சித்தாமூா் ஊராட்சி ஒன்றியம், மேல்மருவத்தூா் ஊர... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை சாா்பில் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில... மேலும் பார்க்க

இறால் விலை சரிவால் மீனவா்கள் வேதனை

மீன்பிடி தடை காலங்களில் ரூ.30,000 வரை விற்பனையாகும் அரை கிலோ எடை கொண்ட கதம்பரா இறால் தற்போது வெறும் ரூ.3,000-க்கு மட்டுமே விற்பனையாவதாக சதுரங்கப்பட்டினம் மீனவா்கள் வேதனை தெரிவித்தனா். கல்பாக்கம் அடுத்... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்: கட்டடங்கள் சேதம்

கடல் சீற்றத்தால் மாமல்லபுரத்தில் 10 மீட்டா் தூரத்துக்கு முன்னோக்கி வந்த கடலால் உணவு விடுதி கட்டடங்களை ராட்சத அலைகள் சேதப்படுத்தின. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் செவ்வாய்க்கிழமை கடல் சீற்றம் ஏ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சா் அன்பரசன் ஆய்வு

திருப்போரூா் வட்டம், திருவிடந்தை ஊராட்சி மற்றும் காட்டாங்குளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.ம... மேலும் பார்க்க

பாண்டீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

மதுராந்தகம் அடுத்த அண்டவாக்கம் கிராமத்தில் காமாட்சி உடனுறை அண்டபாண்டீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள காமாட்சி அம்மன், அண்டபாண்டீஸ்வரா், முருகன் உள்ளிட்... மேலும் பார்க்க